கைதி படுகொலை; ஆறு போலிசார் இடைநீக்கம்

கைதி படுகொலை; ஆறு போலிசார் இடைநீக்கம்

2 mins read
24804adb-93b0-456d-bf2a-9eefa22970ef
கைதி முத்து மனோ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினர்களும் வாகைக்குளம் கிராம மக்களும் சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். படம்: ஊடகம் -

திரு­நெல்­வேலி: பாளை­யங்­கோட்டை மத்­திய சிறை­யில் கைதி­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட மோத­லில் முத்து மனோ, 27, என்ற கைதி கல்­லால் அடித்து படு­கொலை செய்­யப்­பட்­டார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக ஆறு போலி­சாரை அதி­ர­டி­யாக பணி­யிடை நீக்­கம் செய்து டிஐஜி பழனி உத்­த­ர­விட்டு உள்­ள­தாக ஒன் இந்­தியா ஊட­கச் செய்தி குறிப்­பிட்­டுள்­ளது.

பாளை­யங்­கோட்டை மத்­திய சிறை­யின் துணை அதிகாரி சிவன், உதவி அதிகாரி­கள் கங்­கா­த­ரன், சங்­கர சுப்பு, ஆனந்­த­ராஜ், தலைமை வார்­டன் வடி­வேல் முரு­கையா, சிறைக்­கா­வ­லர் சாம் ஆல்­பர்ட் ஆகிய ஆறு பேரி­ட­மும் விசா­ரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்­கப்­படும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

விசா­ர­ணைக் கைதி­யான வாகைக் குளத்­தைச் சேர்ந்த முத்து மனோ­வின் உயி­ரி­ழப்­புக்கு காரண மாக இருந்­த­வர்­க­ளைக் கைது செய்ய வலி­யு­றுத்தி அவ­ரது உற­வி­னர்­கள் பாளை­யங்­கோட்டை சிறைச்­சாலை முன்பு எட்டு மணி நேரம் சாலை­ம­றி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

அதி­கா­ரி­கள் நடத்­திய பல­கட்ட பேச்­சு­வார்த்­தை­கள் தோல்வி அடைந்த நிலை­யில், திரு­நெல்­வேலி மாவட்ட ஆட்­சி­யர் விஷ்ணு பேச்சு­வார்த்­தை­யில் இறங்­கி­னார்.

அப்­போது, "சிறைத்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்­டும். முத்து மனோ குடும்­பத்­துக்கு இழப்­பீ­டாக ரூ.1 கோடி நிவா­ர­ணம் வழங்­க­வேண்­டும்," என்று உற­வி­னர்கள் கோரிக்­கை­களை முன்­வைத்­த­னர்.

இந்­தப் பேச்­சு­வார்த்­தை­யில் உடன்­பாடு ஏற்­பட்­டதை அடுத்து அவர்­க­ளது போராட்­டம் ஒரு முடி­வுக்கு வந்­தது.

வெடி­குண்டு வைத்­தி­ருந்த வழக்­கின் தொடர்­பில் முத்து மனோ கடந்த 8ஆம் தேதி கைதாகி பாளை­யங்­கோட்டை சிறை­யில் அடைக்­கப்­பட்ட நிலை­யில், சிறைக் கைதி­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட மோத­லில் முத்து மனோ கல்­லால் அடித்­துக் கொல்­லப்­பட்­டார்.