சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆடவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆடவருக்கு ஆயுள் தண்டனை

1 mins read
d8a78cde-f2e2-493f-bfe4-f7a8ffd33f25
-

சென்னை: 12 வயது சிறு­மிக்குப் பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்த ஆடவ­ருக்கு ஆயுள் தண்­டனை விதித்து சென்னை சிறப்பு நீதி­மன்­றம் தீர்ப்பு அளித்­துள்­ளது.

சென்னை புளி­யந்­தோப்பு, திரு­விக நக­ரைச் சேர்ந்­த­வர் ஜலா­லு­தீன், 29. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வண்­ணா­ரப்பேட்­டை­யைச் சேர்ந்த சிறு­மிக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்துள்­ளார்.

இது­கு­றித்து சிறு­மி­யின் தாயார் அளித்த புகா­ரின் பேரில் ஜலா­லு­தீன் கைது செய்­யப்பட்டார்.

சென்னை சிறப்பு நீதி­மன்­றத்­தில் நடந்த வழக்கை விசா­ரித்த நீதி­பதி, ஜலா­லு­தீன் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி அவ­ருக்கு ஆயுள் தண்­ட­னை­யும் ரூ.15,000 அப­ரா­த­மும் விதித்து தீர்ப்பு கூறி­னார்.

சிறு­மி­யின் மறு­வாழ்­வுக்­காக தமி­ழக அரசு ரூ.5 லட்­சம் வழங்க வேண்­டும் என்­றும் நீதி­பதி உத்தரவிட்டுள்ளார்.