புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு

புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு

2 mins read
2e8603d3-46df-425a-b4eb-2bee5080ea16
-

திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள் மூடப்படும்; ஊரடங்கு உத்தரவு நீடிக்கும்

சென்னை: தமி­ழ­கத்­தில் கிரு­மித்­தொற்­றுப் பர­வல் மீண்­டும் அதி­க­ரித்து வரும் நிலை­யில் புதிய கட்­டுப்­பா­டு­களைத் தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

கடந்­தாண்டு கிரு­மித்­தொற்று தாக்­கம் உச்­சத்­தில் இருந்­த­போது அறி­விக்­கப்­பட்ட விதி­மு­றை­கள் தமி­ழ­கத்­தில் மீண்­டும் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

திங்கட்கிழமை முதல் மாநி­லம் முழு­வ­தும் உள்ள திரை­ய­ரங்­கு­கள், வணிக வளா­கங்­களை சில நாட்­க­ளுக்கு மூட­வேண்­டும் என அரசு அறி­வித்­துள்­ளது.

மேலும் மாந­க­ராட்சி, நக­ராட்­சி­களில் உள்ள அழகு நிலை­யங்­கள், சிகை அலங்­கா­ரக் கடை­கள் மறு அறி­விப்பு வரும்­வரை மூடப்­பட்­டி­ருக்­கும்.

உண­வ­கங்­கள், தேநீர் கடை­களில் அமர்ந்து சாப்­பிட அனு­மதி இல்லை. 'பார்­சல்' சேவைக்கு மட்­டுமே அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் விடு­தி­களில் தங்கி உள்­ள­வர்­க­ளுக்கு அவர்­க­ளது அறை­க­ளுக்கே உணவு அனுப்­பப்­ப­ட­வேண்­டும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்து வழி­பாட்­டுத் தலங்­க­ளி­லும் பொது­மக்­கள் நேரில் சென்று வழி­பட இய­லாது. திரு­ம­ணம் உள்­ளிட்ட நிகழ்ச்­சி­களில் 50 பேர் மட்­டுமே பங்­கேற்க முடி­யும்.

அரசு, தனி­யார் பேருந்­து­களில் நின்­று­கொண்டே பய­ணம் செய்ய அனு­மதி இல்லை.

வாட­கை கார்­களில் ஓட்­டு­நர் தவிர்த்து மூன்று பேர், ஆட்­டோக்­களில் ஓட்­டு­நர் தவிர்த்து 2 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர். இறுதி ஊர்­வ­லங்­கள், தக­னச் சடங்­கு­களில் பங்­கேற்க 25 பேருக்கு மேல் அனு­மதி இல்லை.

தமி­ழ­கத்­தில் ஏற்­கெ­னவே வார நாட்­களில் இரவு நேர ஊர­டங்­கும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் முழு ஊர­டங்­கும் அம­லில் உள்­ளது. இந்­நி­லை­யில் தமி­ழக அரசு புதிய கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­துள்­ளது.

அதன்­படி தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில் 50 விழுக்­காடு ஊழி­யர்­கள் கண்­டிப்­பாக வீட்­டில் இருந்து பணி­பு­ரிய வேண்­டும் என்­றும் இரவு நேர ஊர­டங்கு நீடிக்­கும் என்­றும் அரசு தெரி­வித்­துள்­ளது.

வெளி­நா­டு­களில் இருந்து விமா­னம், கப்­பல் மூலம் தமி­ழ­கம் வரும் அனை­வ­ரும் அரசு அறி­வித்­துள்ள வலைத்­த­ளத்­தில் தங்­க­ளைப் பற்­றிய விவ­ரங்­க­ளைப் பதிவு செய்­ய­வேண்­டும் என்­றும் தமி­ழ­கத்­திற்­குள் நுழை­யும்­போது அந்­தப் பதிவு தொடர்­பான ஆவ­ணத்­தைக் கட்டாயம் காண்­பிக்க வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இரவு நேர ஊர­டங்கு, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் முழு ஊர­டங்கு தொடர்ந்து அம­லில் இருக்­கும்.

ஞாயிற்­றுக்­கி­ழமை ஊர­டங்கு என்­ப­தால் சனிக்­கி­ழமை அன்று மாநி­லம் முழு­வ­தும் மதுக்­க­டை­களில் கூட்­டம் அலை­மோ­தி­யது. ஒரே நாளில் 252 கோடி ரூபாய் மதிப்­புள்ள மது வகை­கள் விற்­றுத் தீர்ந்­தன.

இதற்­கி­டையே அதி­முக நாடாளுமன்ற உறுப்பினர் விஜ­ய­கு­மா­ருக்கு கொரோனா தொற்று இருப்பது உறு­தி­யாகி உள்ளது.