ஞாயிறு முழு ஊரடங்கு: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

ஞாயிறு முழு ஊரடங்கு: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

2 mins read
915d702f-4ffd-4352-9482-fd6b06490089
-

சென்னை: தமி­ழ­கத்­தில் முழு ஊர­டங்கு கார­ண­மாக நேற்று அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் சாலை­கள் வெறிச்­சோ­டின. பொது­மக்­கள் தங்­கள் வீடு­க­ளி­லேயே முடங்­கி­னர்.

தகுந்த கார­ணங்­க­ளின்றி வெளியே சுற்­றித் திரி­வோ­ரைக் கட்­டுப்­ப­டுத்த போலி­சார் தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­ட­னர். அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் கடை­கள் அடைக்­கப்­பட்­டன.

துணிக் கடை­கள், கைபேசி விற்­ப­னைக் கூடங்­கள், மளி­கைக் கடை­கள், தேநீர் கடை­கள் ஆகி­ய­வை­யும் மூடப்­பட்­டி­ருந்­த­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சாலை­யோ­ரக் கடை­களும் மூடப்­பட்­டி­ருந்­த­து­டன் மக்­கள் நட­மாட்­ட­மும் அறவே காணப்­ப­ட­வில்லை. மக்­கள் அதி­கம் கூடும் பகு­தி­களும் ஆள் அர­வ­மின்றி வெறிச்­சோ­டிக் காணப்­பட்ட நிலை­யில், தேவை­யின்றி வாக­னங்­களில் வெளியே சுற்­றி­ய­வர்­க­ளின் வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

ஊர­டங்கு உத்­த­ரவு திடீ­ரென பிறப்­பிக்­கப்­பட்­ட­தால் திரு­ம­ணம் உள்­ளிட்ட நிகழ்­வு­கள் பாதிக்­கப்­பட்­டன. கோயில்­க­ளுக்­குள் பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டாத நிலை­யில் சில இடங்­களில் திரு­ம­ணங்­கள் வீதி­யில் நடை­பெற்­ற­தாக மாலை­ம­லர் செய்தி நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் நேற்று ஊர­டங்கு கார­ண­மாக 37 லட்­சம் கடை­கள் மூடப்­பட்­டி­ருந்­த­தாக வணி­கர் சங்க பேர­மைப்பு தெரி­வித்­துள்­ளது. இத­னால் 25 ஆயி­ரம் கோடி ரூபாய் வரு­வாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக அச்­சங்­கம் கூறி­யுள்­ளது.

தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு

இதற்­கி­டையே சென்­னை­யில் கோவாக்­சின் தடுப்­பூ­சிக்குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் இத­னால் இரண்­டாம் தவணை ஊசி போட்­டுக்­கொள்ள முடி­யா­மல் மக்­கள் தவிப்­ப­தா­க­வும் தி இந்து நாளேடு தெரி­வித்­துள்­ளது. கடந்த 3 நாட்­க­ளாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அதற்­கான மையங்­க­ளுக்­குச் சென்ற பொது­மக்­களில் பலர் தடுப்­பூசி இல்­லா­த­தால் ஏமாற்­றத்­து­டன் திரும்­பிச் சென்­ற­தாக அச்­செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேலும் புதிய ஊர­டங்கு அறி­விப்பை அடுத்து சொந்த ஊர் செல்ல முயன்ற பலர் போதிய பேருந்­து­கள் இல்­லா­த­தால் பல மணி நேரம் காத்­துக் கிடந்­த­னர்.

ஆக்சிஜன் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் உற்பத்தி செய்­யப்­படும் ஆக்சிஜன் பிற மாநி­லங்­க­ளுக்கு அனுப்­பும் மத்­திய அர­சின் முடி­வுக்கு தமி­ழ­கம் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளது. தமி­ழ­கத்­தில் பாதிப்பு அதிகரிப்பதால் ஆக்­சி­ஜன் தேவையும் அதி­க­ரித்­துள்­ளது என்று பிர­த­மர் மோடிக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் முதல்­வர் பழ­னி­சாமி குறிப்­பிட்­டுள்­ளார்.

எனவே, தமி­ழத்­தில் இருந்து பிற மாநி­லங்­க­ளுக்கு ஆக்­சி­ஜன் அனுப்­பு­வதை உட­ன­டி­யாக நிறுத்­த­வேண்­டும் என அவர் கூறியுள்ளார்.