வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டது

வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டது

1 mins read
fd860c34-f340-417e-943b-530c64d8300d
-

சென்னை: கொரோனா பாதிப்பு அதி­க­ரித்து வரு­வதை அடுத்து தமி­ழ­கத்­தில் வங்­கிச் சேவை நேரம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

திங்­கட்­கி­ழமை முதல் மாநி­லத்­தில் உள்ள அனைத்து வங்­கி­க­ளி­லும் வாடிக்­கை­யா­ளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்­ப­கல் 2 மணி வரை என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதாவது, அடுத்த அறிவிப்பு வரும் வரை அரை நாள் மட்டுமே இனி வங்கிகள் செயல்படும்.

மாநில வங்­கி­யா­ளர்­கள் குழு­மம் இம்­மு­டிவை எடுத்­துள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.

இன்று முதல் எதிர்­வ­ரும் 30ஆம் தேதி வரை வங்­கிச் சேவை நேரம் குறைக்­கப்­ப­டு­வ­தாக வங்­கி­யா­ளர்­கள் குழு­மம் தெரி­வித்­துள்­ளது.

"திங்கட்கிழமை (இன்று) முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரை நாள் மட்டுமே இயங்கும். எனவே மறு அறிவிப்பு வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் பதிவு, திருத்தப் பணிகள் நிறுத்திவைக்கப்படும்," என வங்கியாளர்கள் குழுமம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

தொற்­றுப்­ப­ர­வல் கட்­டுக்­குள் வர­வில்லை எனில் இக்­கு­ழு­மம் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் எனக் கூறப்­ப­டு­கிறது. சேவை நேரம் குறைக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சிர­மம் ஏற்­ப­டாது என்­றும் மின்­னி­லக்­கச் சேவையை அதி­கம் பயன்­ப­டுத்­து­மா­றும் வங்­கித்­த­ரப்­பில் அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.