சென்னை: சித்த மருத்துவம் மூலம் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பில் இருந்து தாம் மீண்டுள்ளதாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் சித்தா, ஆயுர்வேத சிகிச்சைகளின் பக்கம் முகம் திருப்ப வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் இவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது. இவரது மனைவியும் பின்னர் பாதிக்கப்பட்டார்.
"அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் தொற்று பாதிப்பில் இருந்து மீளவில்லை. இதையடுத்து சித்த மருத்துவத்தை நாடினேன். முன்னதாக பரிசோதனையின்போது எனது நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் நிமோனியா காய்ச்சலும் மரணத்தின் விளிம்புவரை கொண்டு சென்றது.
"13 நாட்கள் மரணத்தோடு போராடினேன். இறுதியில் சித்த மருத்துவத்தின் உதவியால் மீண்டுள்ளேன்.
"என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது சித்த மருத்துவம்தான். ஆனால் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகியவற்றிற்கு அரசின் ஒத்துழைப்பு இல்லை என்பதுதான் அவலம்," என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
தனது அனுபவம் மற்றவர்களுக்குப் பயன்படும் என்பதற்காகவே அதைப் பகிர்ந்துகொள்வதாக கூறியுள்ளார்.

