ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிக அனுமதி

3 mins read
973271f2-54e5-4222-af28-e01f74178bc2
-

சென்னை: ஸ்டெர்­லைட் ஆலையை தற்­கா­லி­க­மாகத் திறக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழக முதல்­வர் எடப்­பாடி தலை­மை­யில் நேற்று கூடிய அனைத்­துக் கட்­சிக் கூட்டத்­தில் இந்த முடிவு எடுக்­கப்பட்­டது.

தமி­ழ­கத்­தில் கொரோ­னா­கிரு­மிப்பர­வ­லின் இரண்டாவது அலை சுனா­மி­யைப் போன்று வேக­மாகத் தாக்கி வரு­கிறது. மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறும் நோயா­ளி­ க­ளுக்கு நுரை­யீ­ரல் பாதிப்பு அதி­கம் இருந்­தால் அவர்­க­ளுக்கு 'வென்­டி­லேட்­டர்' சிகிச்சை தேவைப்­ ப­டு­கிறது. இதற்கு செயற்கை உயிர்­வாயு தேவைப்­ப­டு­கிறது. ஆனால் நாடு முழு­வ­தும் கொரோனா நோயா­ளி­கள் அதி­க­ரித்த வண்­ணம் இருப்­ப­தால் உயிர்­வாயு தோம்பு தட்­டுப்­பா­டாக உள்­ளது. பல இடங்­களில் உயிர்­வாயு கிடைக்­கா­மல் நோயா­ளி­கள் இறக்­கும் சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்நிலை­யில் தூத்­துக்­கு­டி­யில் அடைக்­கப்­பட்டு கிடக்­கும் ஸ்டெர்­லைட் ஆலை­ நிர்­வா­கம், செயல்பட அனு­மதி வழங்­கி­னால் ஆக்­சி­ஜன் தயா­ரித்து வழங்கத் தயா­ராக இருப்பதாக உச்­ச­ நீ­தி­மன்­றத்­தில் தெரி­வித்­தது.

அத­னைத் தொடர்ந்து தமி­ழக அரசு பதி­ல­ளிக்க உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. ஆனால், தமி­ழக அரசு ஸ்டெர்­லைட் ஆலையைத் திறக்க அனு­ம­திக்க முடி­யாது என்று எதிர்ப்பு தெரி­வித்­து­விட்­டது.

அதே நேரத்­தில் மத்­திய அரசு தரப்­பில் ஸ்டெர்­லைட் ஆலையை தமி­ழக அரசே கைய­கப்­ப­டுத்தி உயிர்­வாயு தயா­ரிக்­க­லாம் என்று யோசனை வழங்­கி­யது. உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­ப­தி­யும் இதே கருத்தை வலி­யு­றுத்­தி­னார்.

இந்நிலை­யில் தமி­ழக முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, அனைத்துக் கட்சி தலை­வர்­க­ளு­டன் நேற்று அவ­சர ஆலோ­சனை நடத்­தி­னார்.

சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் உள்ள நாமக்­கல் கவி­ஞர் மாளி­கை­யில் நடை­பெற்ற அந்தக் கூட்­டத்­தில் தூத்­துக்­கு­டி­யில் உள்ள ஸ்டெர்­லைட் ஆலையைத் திறக்க அனு­ம­திக்­க­லாமா என்­பது குறித்­தும் ஆலையைத் திறந்து அங்கு தமி­ழக அரசே உயிர்­வாயு தயா­ரிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­ட­லாமா என்­பது குறித்தும் ஆலோ­சனை நடை­பெற்­றது.

முத­ல­மைச்­சர் எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில் நடை­பெற்ற இந்த அனைத்­துக்­கட்சி கூட்­டத்­தில் அதி­முக சார்­பில் ஓ. பன்­னீர் செல்­வம், விஜ­ய­பாஸ்­கர், ஆர்பி உத­ய­கு­மார் பங்­கேற்­ற­னர். திமுக சார்­பில் கனி­மொழி, ஆர்.எஸ். பாரதி கலந்­து­கொண்­ட­னர். அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எட்டுக் கட்­சி­க­ளின் முக்­கிய தலை­வர்­கள் இந்த கூட்­டத்­தில் பங்­கேற்­றுள்­ள­னர்.

உயிர்­வாயு உற்­பத்தி செய்­வ­தற்­காக மட்­டுமே ஸ்டெர்­லைட் ஆலையைத் திறக்­க­லாம். உயிர்­வாயு உற்­பத்­தியைத் தவிர்த்து வேறு எந்த செயல்­பா­டு­க­ளுக்­கும் அனு­மதி வழங்­கக்­கூ­டாது என்று திமுகவின் கனி­மொழி கூறி­னார்.

ஸ்டெர்­லைட் ஆலையைத் திறக்க தமி­ழக பா.ஜனதா தலை­வர் முரு­கன் ஆத­ரவு தெரி­வித்­தார்.

முத்­த­ர­சன், "தமி­ழ­கத்­தில் உற்­பத்­தி­யா­கும் உயிர்­வாயு அர­சின் அனு­மதி இல்­லா­மல் மத்­திய அரசு வேறு மாநி­லங்­க­ளுக்கு வழங்கக் கூடாது. மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் தூத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை­யில் உயிர்­வாயு உற்­பத்தி செய்­ய­லாம்," என்­றார்.

இதை­ய­டுத்து, தூத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலையைத் திறக்க வேண்­டும் என்­பது தமி­ழக அர­சின் நோக்­கம் அல்ல என்று முதல்­வர் பழ­னி­சாமி கூறி­னார்.

இருந்­தா­லும் உயிர்­வாயு தயா­ரிக்க ஸ்டெர்­லைட் ஆலையை நான்கு மாதங்­க­ளுக்குத் திறக்க தற்­கா­லிக அனு­மதி அளிக்­க­லாம் என முடிவு எடுக்­கப்­பட்­டது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என ஆலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

இதற்கிடையே திமுக ஆட்சி அமைந்த பிறகு எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப் படாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.