வேட்பாளர்களின் முகவர்களுக்கு கட்டாய கொவிட்-19 சோதனை

வேட்பாளர்களின் முகவர்களுக்கு கட்டாய கொவிட்-19 சோதனை

1 mins read
77d3b112-fb83-43fb-99ce-a0c8fbf98714
-

சென்னை: தமி­ழக சட்­ட­சபை தேர்­த­லில் பதி­வான வாக்­கு­கள் எண்­ணிக்கை மே 2ஆம் தேதி நடை­பெற உள்­ளது. அப்போது வேட்­பாளர்­க­ளின் முகவர்களுக்கு கொரோனா சோதனை கட்­டா­யம் என தேர்­தல் ஆணை­யம் மறு உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து தமி­ழக தலைமை தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரதா சாகு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

"வாக்கு எண்­ணிக்கை மையங்­க­ளுக்கு வரும் வேட்­பா­ளர்­க­ளின் முகவர்களுக்கு கிருமி சோதனை கட்­டா­யம். வாக்கு எண்­ணிக்கை துவங்­கும் 72 மணி நேரத்­திற்கு முன்­ன­தாக முகவர்கள் கொரோனா தொற்று இல்லை என்பதைக்காட்டும் சான்­றி­தழ் வழங்க வேண்­டும்.

"வாக்கு எண்­ணிக்­கை­யின் போது முக­வர்­கள் கட்­டா­யம் முக­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும். அலு­வ­லர்­கள் மற்­றும் முக­வர்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி செலுத்­தி­யி­ருக்க வேண்­டும். சரா­ச­ரி­யாக 14 மேசைகள் அமைக்­கப்­பட்டு வாக்கு எண்­ணிக்கை நடை­பெ­றும். ஒவ்­வொரு மேசைக்­கும் ஒரு சிசி­டிவி கேமரா அமைக்­கப்­பட்டு வாக்கு எண்­ணிக்கை நடை­பெ­றும்.

"பதி­வான தபால் வாக்­கு­களை முத­லில் 500, 500ஆக பிரித்து பிறகு எண்­ணப்­படும். குலுக்­கள் முறை­யில் ஒரு தொகு­திக்கு ஐந்து விவி­பேட் இயந்­தி­ரங்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு வாக்கு எண்­ணிக்கை சரி­பார்க்­கப்­படும். ஏப்­ரல் 23ஆம் தேதி வரை ஐந்து லட்­சம் தபால் வாக்­கு­கள் பெறப்­பட்­டுள்­ளன," என்று அறிக்கையில் திரு சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.