கிருமித்தொற்று: தமிழகத்தில் 82 பேர் மரணம்

கிருமித்தொற்று: தமிழகத்தில் 82 பேர் மரணம்

2 mins read
1e106bd2-3b19-4037-870f-811261d9f6e2
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கிரு­மித் தொற்­றுக்கு 19 நாட்­களே ஆன குழந்தை உட்­பட 82 பேர் உயி­ரிழந்து உள்­ள­னர். தமி­ழ­கத்­தில் ஞாயிறு அன்று மட்­டும் புதி­தாக 15,659 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இத­னால் கிரு­மித்­தொற்று எண்ணிக்கை ஒரு லட்­சத்து 5,180ஐ தொட்டுள்ளது என்று தமிழக ஊட­கங்­களின் தகவல்கள் தெரி­வித்­தன. இந்த நிலை­யில் அதே நாளில் புதி­தாக 1 லட்­சத்து 22 ஆயி­ரத்து 610 பேருக்கு கொரோனா பரி சோதனை செய்­யப்­பட்­டது.

அதில் மொத்­தம் 15,659 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் நேற்று அதிகபட்­ச­மாக சென்­னை­யில் 4,206 பேரும் செங்­கல்­பட்­டில் 1,242 பேரும் கோவை­யில் 1,038 பேரும் குறைந்­த­பட்­ச­மாக நீல­கி­ரி­யில் 79 பேரும் அரி­ய­லூ­ரில் 49 பேரும் பெரம்­ப­லூ­ரில் 15 பேரும் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். தமி­ழ­கத்­தில் இது­வரை 2 கோடியே 16 லட்­சத்து 47 ஆயி­ரத்து 723 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளது. இதில் 10 லட்­சத்து 81 ஆயி­ரத்து 988 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

ஞாயிறு அன்று ஒரே நாளில் மட்­டும் கொரோ­னா­வுக்கு அரசு மருத்­து­வ­ம­னை­யில் 31 பேரும் தனி­யார் மருத்­து­வ­மனை­யில் 51 பேரும் என 82 பேர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­னர். இதில் பிறந்து 19 நாட்­கள் மட்­டுமே ஆன சென்­னையைச் சேர்ந்த பெண் குழந்தை கடந்த 22ஆம் தேதி காய்ச்­சல் கார­ண­மாக சென்னை எழும்­பூர் குழந்­தை­கள் நல மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டது. அந்த குழந்­தைக்கு கொரோனா பரி­சோ­தனை செய்­த­போது தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. மருத்­து­வர்­கள் குழந்­தைக்குத் தீவிர சிகிச்சை அளித்­த­னர். ஆனால் சிகிச்சை பல­னின்றி குழந்தை உயி­ரி­ழந்­தது.

தமி­ழ­கத்­தில் இது­வரை 13 ஆயி­ரத்து 557 பேர் கொரோனா நோய்த் தொற்­றால் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.