சென்னை: தமிழக மாநிலத்திலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இம்மாதம் ஆறாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
ஒவ்ெவாரு தேர்தலிலும் தேர்தல் வெற்றி ஒருபுறம் இருந்தாலும் கட்சித் தொண்டர்களின் கொண்டாட்டம் ஒரு பெரிய விழா போல் இருக்கும். பட்டாசுகள் வெடிப்பதும் இனிப்புப் பதார்த்தங்களை பகிர்ந்து கொள்வதும் ஆட்டம் ஆடி கொண்டாடுவதும் வியக்கவைக்கும்.
இதுபோன்ற கொண்டாட்டங்கள் வரும் 2ஆம் தேதியன்று கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக மாலை மலர் ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமி பரவுவதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் உள்பட ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியைக் கொண்டாட தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

