லட்சக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை: எட்டு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று

லட்சக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை: எட்டு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று

1 mins read
f2e9091e-4eb1-423f-a29c-cfbff4bd0786
-

சென்னை: இந்­தி­யா முழுவதும் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்டு, சிகிச்சை பெற்று வரு பவர்­க­ளின் எண்­ணிக்கை நாளும் அதி­க­ரித்து வந்தாலும், சில மாநி­லங்­களில் மட்­டும் இந்த எண்­ணிக்கை லட்­சத்­தைக் கடந்­துள்­ளதாக புதிய தலைமுறை ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்­தியாவில் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை 3.5 லட்­சத்­தைக் கடந்­துள்ள நிலை­யில், எட்டு மாநி­லங்­களில் மட்­டும் இத்தொற்­றுக்கு லட்­சக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர்.

ஒரு லட்­சத்­திற்­கும் அதிகமான கொவிட்-19 நோயா­ளி­கள் சிகிச்சை பெற்று வரும் எட்டு மாநி­லங்­க­ளின் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது மத்­திய அரசு. அதன்படி தமி­ழ­கம் கடைசி இடத்தில் உள்ளது. மகா­ராஷ்­டிரா (700,207), உத்­த­ரப்­பி­ர­தே­சம் (297,616), கர்­நா­டகா (262,181), கேரளா (219,221), ராஜஸ்­தான் (136,702), சத்­தீஸ்­கர் (123,835), குஜ­ராத் (115,006), தமிழ்­நாடு (105,180) பேரும் தற்­போது கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.