திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த ஐவர் பேருந்து விபத்தில் பலி

திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த ஐவர் பேருந்து விபத்தில் பலி

1 mins read
fa64060b-986c-4101-866d-f3b523f8fcfd
கூவத்தூர் அருகே ஈசிஆர் சாலையில் விபத்துக்குள்ளாகி உருக்குலைந்து காணப்படும் ஆம்னி பேருந்து. பேருந்து இருக்கை களில் சிக்கிக்கொண்டுள்ள பயணிகளை இளையர்கள் சிலர் மீட்கின்றனர். படம்: தமிழக ஊடகம் -

கூவத்­தூர்: சென்­னையை அடுத்த கூவத்­தூர் அருகே திரு­மண நிச்­ச­ய­தார்த்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஆம்னி பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்த னர். அப்போது, அவர்களது பேருந்து அரசுப் பேருந்து மீது மோதி விபத்­துக்குள்­ளா­னது.

இவ்­வி­பத்­தில் ஆம்னி பேருந்­தில் பய­ணம் செய்த அன்­ன­பூ­ரணி, அல­மேலு, முனி­யம்­மாள் ஆகிய மூன்று பெண்­கள் உள்­பட நால்­வர் உயி­ரி­ழந்­ததாக நியூஸ்டிஎம் ஊடகம் தெரிவித்துள்ளது.

செங்­கல்­பட்டு அரசு மருத்­து­வ­மனை­யில் படு­கா­ய­ம­டைந்த 15 பேர் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்பட்­ட­னர். இவர்­களில் அர­சுப் பேருந்து ஓட்­டு­நர் ஐயப்­பன், 40, சிகிச்சை பல­னின்றி நேற்று உயி­ரி­ழந்­தார்.

மேல்­ம­ரு­வத்­தூரை அடுத்த ராமா­பு­ரத்­தைச் சேர்ந்­த­வர் சுரேஷ். இவ­ரது திரு­மண நிச்­ச­ய­தார்த்த நிகழ்ச்­சிக்­காக கல்­பாக்­கத்­தில் உள்ள பெண் வீட்­டிற்கு உற­வி­னர்­கள் ஆம்னி பேருந்­தில் புறப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், கூவத்­தூர் அருகே சென்றுகொண்­டி­ருந்­த அர­சுப் பேருந்து, காத்­தான்­கடை என்ற இடத்­தில் ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து எதிர்­த்தி­சை­யில் வேகமாக வந்து கொண்­டி­ருந்த ஆம்னி பேருந்தின் மீது பயங்­க­ர­மாக மோதி­யுள்ளது.

இதை­ய­டுத்து, ஆம்னி பேருந்­தில் திரு­மண நிச்­ச­ய­தார்த்த நிகழ் வுக்குச் சென்று ெகாண்­டி­ருந்­த­வர்­கள் பேருந்­தில் இருந்து தூக்கி வீசப்­பட்­ட­னர். சம்­ப­வம் தொடர்­பாக கல்­பாக்­கம் போலி­சாரின் விசாரணை தொடர்கிறது.

ஆம்னி பேருந்து ஓட்­டு­நர் அதி­வே­கத்­தில் வந்­ததே விபத்­திற்கு கார­ணம் என்று முதல்­கட்ட விசா­ரணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.