கிருமிப் பரவலால் 571 சிறார்கள் பாதிப்பு

கிருமிப் பரவலால் 571 சிறார்கள் பாதிப்பு

2 mins read
4349850b-120f-4c82-862c-fb3890cb2714
-

சென்னை: கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்துக்கு 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் 12 வயதுக்கு உட்பட்ட 40,323 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20,439 பேர் பெண் குழந்தைகள், 19,884 பேர் ஆண் குழந்தைகள் ஆவர். ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3.62% ஆகும்.

தொற்று அறிகுறியுடன் இருப்பவர்கள் வீடுகளில் முறையாகத் தனிமைப்படுத்திக் கொள்ளாததன் காரணமாகவே குழந்தை களும் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுவதாக நியூஸ் 18 ஊடகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஒருநாள் பாதிப்பு தொடர்ந்து 500க்கு மேலாக அதிகரித்து வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மிப் பர­வல் நாளும் அதி­க­ரித்து வரும் நிலை­யில், தலை­ந­கர் சென்­னை­யில் இத்­தொற்று பாதிப்பு சுனா­மி­போல் மீண்­டும் அதி­வே­க­மா­கப் பரவி வரு­வ­தா­க­வும் மக்­கள் கவ­ன­மாக இருக்கவேண்­டும் என்­றும் சிறப்பு ஒருங்­கி­ணைப்பு அதி­காரி எம்.ஏ.சித்­திக் தெரி­வித்­துள்ளதாக மற்றொரு ஊட­கத் தகவல் கூறியுள்­ளது.

கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கையைக் கண்­கா­ணிக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள சென்­னைக்­கான சிறப்பு ஒருங்­கி­ணைப்பு அதி­காரி எம்.ஏ.சித்­திக் ஐஏஎஸ் நேற்று சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­போது, "சென்னை மக்­கள் மிக­வும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டிய நேரம் இது.

"மக்­கள் கூட்­டம் கூடுவதைத் ­தவிர்க்க வேண்டும். விழிப்­பு­டன் இருக்க வேண்­டும். சென்­னை­யில் மட்­டும் தொற்று பாதித்த 25,000 பேருக்கு வீட்­டில் வைத்து சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. சென்­னை­யில் போதிய ஆக்­சி­ஜன் இருப்­பில் உள்­ளது," என்றார்.

இந்­நி­லை­யில், ஒரு­நாள் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்­தில் 16,000 பேரைத் தாண்­டி­யுள்­ளது. பெருந்­தொற்­றுக்கு பலி­யா­வோ­ரின் எண்­ணிக்கை நூறு பேரை நெருங்கி உள்­ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

"ஒரே நாளில் 12 வய­துக்­குட்­பட்ட 571 சிறு­வர், சிறு­மி­கள் புதி­தாக கொரோனா தொற்றுப் பாதிப்­புக்கு ஆளா­கி­யுள்ளனர். 110,308 பேர் கொரோ­னா­வுக்கு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

"புதி­தாக 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறு­தி­யானது. பெருந்­தொற்று பாதிப்பிலிருந்து 15,114 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர். இத்ெதாற்றுக்கு 98 பேர் உயி­ரி­ழந்­த­னர். சென்னை ந­க­ரில் மேலும் 4,764 பேருக்கு இப்பாதிப்பு உறுதியாகியுள்­ளது," என மாநில சுகா­தாரத் ­துறை அறிக்கையில் கூறியுள்ளது.