மருந்து வாங்க திரளும் மக்களால் கிருமி பரவும் ஆபத்து அதிகரிப்பு

மருந்து வாங்க திரளும் மக்களால் கிருமி பரவும் ஆபத்து அதிகரிப்பு

2 mins read
eb05a244-6a57-40c5-9373-a849f905c326
சென்னையில் தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமல் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க திரண்டு நிற்கும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

சென்னை: கடந்த ஆண்டு கொரோனா கிரு­மித்­தொற்று பர­வல் அதி­க­ரித்­த­போது கப­சு­ரக் குடி­நீர் வாங்­கு­வதற்கு மக்­கள் குவிந்­த­னர். அதேேபால் இப்­போது கடந்த மூன்று நாள்களாக ரெம்­டெ­சிவிர் மருந்தை வாங்­கு­வ­தற்காக சென்னை கீழ்ப்­பாக்­கம் அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­ வாயிலில் மக்கள் குவி­ந்து வருகி­றார்­கள்.

அரசு அதி­கா­ரி­கள் இந்த மருந்து குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் மக்கள் கூட்­டமாக நிற்பதைத் தடுக்­க­வும் உட­னடி நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ள­வேண்­டும் என்று பொதுமக்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­தாக சம­யம் தமிழ் ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

கொரோ­னா பாதிப்பில் இருந்து விடுபட இந்த மருந்து முக்­கிய பங்கு வகிப்பதாகக் கூறப்­ப­டு­வ­தால் அந்த மருந்தை வாங்குவதற்காக பொது­மக்­கள் நீண்ட வரி­சை­யில் அதி­காலை மூன்று மணி­யி­லி­ருந்து கல்­லூரி வாயி­லில் கால்­க­டுக்க காத்­தி­ருக்­கின்­ற­னர்.

இதனால், தனி மனித இடை­வெளி பின்­பற்­றப்­ப­டாமல் கூட்ட நெரி­சலில் மக்கள் முண்­டி­ய­டிப்பதால் மருந்து வாங்க வரிசை பிடித்து நிற்ப­வர்­களிடம் கிருமித்தொற்று பர­வும் அபா­யம் ஏற்பட்டுள்­ளது.

இந்நிலையில், தனது கருத்தை ஒன் இந்­தியா ஊட­கத்­தில் பதிவு செய்துள்ள பொது சுகா­தா­ரத் துறை இயக்­கு­நர் செல்வ விநா­ய­கம் காெணாளியும் வெளியிட்டுள்ளார்.

"ரெம்­டெ­சிவிர் உயிர் காக்­கும் மருந்தல்ல. கொரோனா உயி­ரி­ழப்பை இந்த மருந்தால் தடுக்க முடி­யாது. உலக சுகா­தார நிறு­வ­ன­மும் தமி­ழக சுகா­தா­ரத் ­து­றை­யும் வெளி­யிட்­டுள்ள நெறி­மு­றை­களில் இது­பற்றி கூறப்­பட்­டுள்­ளது.

"ரெம்­டெ­சிவிர் மருந்தைப் பயன் படுத்தினால் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறும் காலம் குறையலாம். கிருமியால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு சில­ருக்கு மட்­டுமே இம்மருந்து தேவைப்­படும். அனைத்து அரசு மருத்­து­வ­மனை­க­ளி­லும் போது­மான அளவு இந்த மருந்து கையி­ருப்­பில் உள்­ளது. சுகா­தா­தா­ரத்­ துறை வழி­மு­றை­களின்­படி யாருக்கு இந்த மருந்து தேவைப்­ப­டு­கி­றதோ அவர்­க­ளுக்கு வழங்­கு­கின்­ற­னர்," என்று கூறி­யுள்ளார்.

ரெம்­டெ­சி­விர் ஊசியைப் போட்­டுக்­கொள்வதால் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறும் காலத்தைக் குறைக்­க­லாம். மற்­ற­படி இந்த மருந்தால் கொரோ­னா­வில் இருந்து குணம் பெறும் சூழல் இல்லை. மருத்­து­வ­மனை­யில் அனும­திக்­கப்­பட்­டி­ருக்­கும் ஒரு­ சி­ல­ருக்கு மட்­டுமே இது தேவைப்­ப­ட­லாம். ஆனால், அனை­வ­ருக்­கும் இம்மருந்து முக்கியம் என்ற மாயை தேவையற்றது.

பொது சுகா­தா­ரத் துறை இயக்­கு­நர் செல்வ விநா­ய­கம்