வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் நுழைய தேர்தல் ஆணையம் புதிய நிபந்தனை 'தொற்றில்லை' சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதி

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் நுழைய தேர்தல் ஆணையம் புதிய நிபந்தனை 'தொற்றில்லை' சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதி

2 mins read
7be3bc6e-e235-4f58-998c-8637823416d1
-

சென்னை: தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களும் அவர்­க­ளது முக­வர்­களும் 48 மணி நேரத்­துக்கு முன்­பாக கொவிட்-19 பரி­சோ­த­னை­யைச் செய்து 'தொற்­றில்லை' என்ற சான்­றி­த­ழு­டன் வந்­தால் மட்­டுமே வாக்கு எண்­ணும் மையங்­க­ளுக்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இந்­தத் தக­வ­லை சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் கோ. பிர­கா­சும் உறு­திப்­ப­டுத்தி உள்­ளார்.

"கொவிட்-19 தொற்­றில்லை என்ற சான்று அல்­லது இரு­முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்­கான சான்­று­களைக் கொண்டு வந்­தால் மட்­டுமே வாக்கு எண்­ணும் மையங்­க­ளுக்­குள் வேட்­பா­ளர்­களும் அவர்­க­ளது முக­வர்­களும் அனு­மதிக்­கப்­ப­டுவா்," என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் உள்ள 234 தொகு­தி­க­ளுக்­கும் கடந்த ஆறாம் தேதி­அன்று தேர்­தல் நடைபெற்­றது. இதில் பதி­வான வாக்­கு­கள் மே 2ஆம் தேதி எண்­ணப்­பட உள்­ளன.

இந்­நி­லை­யில், வாக்கு எண்­ணிக்­கைக்கு 48 மணி நேரத்­துக்கு முன்­பாக வேட்­பா­ளர்­கள், வாக்­குச்­சாவடி முக­வா்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு கொவிட்-19 ­பரிசோ­தனை செய்யும் பணியை சென்னை மாந­க­ராட்சி மேற்­கொண்டு வரு­வ­தாக தின­மணி நாளேடு கூறி­யுள்­ளது.

இது­தொ­டா்­பாக ஆணையா் பிர­காஷ் வெளி­யிட்­டுள்ள அறிக்கை யில், "வாக்கு எண்­ணிக்­கைக்­குப் பின்னா் சான்­றி­த­ழைப் பெறுவதற்கு வெற்றி­பெற்ற வேட்­பா­ள­ரு­டன் இரு வா் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டுவா். அதன்பிறகு, வெற்றிக் கொண்­டாட்டம், கோலா­க­லம் என எது­வும் கூடாது," என்று கூறப்­பட்­டுள்­ளது.

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட இருந்த தேர்தல் அலுவலர்கள் பலரும் கிருமித்தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

"இதன் காரணமாக, அவர் களுக்கு மாற்றாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கூடுதல் தேர்தல் அதிகாரிகளை நியமித்துள்ளோம்.

"இதன்படி தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் பணிகளுக்காக 16,387 தேர்தல் அலுவலர்கள் தயா ராக உள்ளனர்," என்று கூறினார்.

இதற்­கி­டையே, வாக்கு எண்­ணும் மையங்­க­ளுக்­குள் நுழைய வேட்­பா­ளர்­க­ளுக்­கு புதிய கட்­டுப்­பா­டு­களை தேர்­தல் ஆணை­யம் விதித்­தி­ருப்­ப­தாக மற்றொரு ஊட­கத் தக­வ­லும் குறிப்­பிட்­டுள்­ளது.

இது­கு­றித்து இந்­திய தேர்­தல் ஆணை­யம், அனைத்து மாநில தலை­மைத் தேர்­தல் அதி­கா­ரி­க­ளுக்­கும் அனுப்­பி­யுள்ள கடி­தத்­தில், "வாக்கு எண்­ணும் வெளிப்புற பகுதி களில் பொதுமக்­கள் கூடக்கூடாது.

"வாக்கு எண்ணும் மையங்­களில் உள்ளவர்களுக்கு முகக்­க­வ­சம், கிரு­மி­நா­சினி, முகத்தடுப்பு, கையு­றை­கள் அளிக்­கப்­பட வேண்­டும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்று கூறப்­பட்­டுள்­ளது.