'இன்று முழு ஊரடங்கு அவசியம் இல்லை'

'இன்று முழு ஊரடங்கு அவசியம் இல்லை'

1 mins read
9c39e541-be66-42db-b222-5f8eb4e7825b
-

சென்னை: நாளை தமி­ழக சட்ட மன்­றத் தேர்­த­லில் பதி­வான வாக்கு­கள் எண்­ணப்­பட உள்ள சூழ்­நி­லை­யில், இன்­றும் நாளை­யும் முழு ஊர­டங்கை பிறப்­பிக்­கும்­படி சென்னை உயர்­நீ­தி­மன்­றம் தமி­ழக அர­சுக்­குப் பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

இதற்கு உயர் நீதி­மன்­றத்­தில் தமி­ழக அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் சத்­திய நாரா­ய­ணன் விளக்­கம் அளித்­த­போது, "தமி­ழ­கத்­தில் உழைப்­பா­ளர்­கள் தின­மான இன்று பொது விடு­முறை என்­ப­தால் முழு ஊர­டங்கை அமல்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

"அத்­து­டன், 18 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் திட்­ட­மும் ெதாடங்­கப்பட உள்ளதால் முழு ஊர­டங்கு பிறப்­பிக்­க­ மு­டி­யாது," என்­றார்.

அதே­ச­ம­யம், ஞாயி­று­தோறும் கடைப்­பி­டிக்­கப்­படும் முழு ஊர­டங்கு நாளை அம­லில் இருக்­கும் என்­றும் வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளதாக நியூஸ்­டிஎம் ஊட­கத் தகவல் கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே, மாநிலத்­தில் கட்­டுப்­பா­டு­கள், தளர்­வு­க­ளு­டன் நடப்­பில் இருந்து வரும் ஊர­டங்கை மறு அறி­விப்பு வரும் வரை நீட்­டிப்பதாகவும் அரசு அறி­வித்­துள்­ளது.

அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக் கு­றிப்­பில், "தமி­ழ­கத்­தில் இரவு நேர ஊர­டங்­கும் ஞாயி­று­தோ­றும் முழு ஊர­டங்­கும் தொட­ரும்.

"தமி­ழ­கத்­தில் கொரோனா தடுப்பு பாது­காப்பு விதிமு­றை­க­ளைப் பின்­பற்றி திரைப்­பட படப்­பி­டிப்பு, சின்­னத்­திரை படப்­பிடிப்­பு­களை நடத்தலாம்.

"முழு ஊர­டங்கு சம­யத்­தில் சென்­னை­யில் குறைந்த அளவில் மெட்ரோ ரயில்­களை இயக்கவும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

"நாளை மட்டும் வேட்­பா­ளர்­கள், முக­வர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு எந்தக் கட்­டுப்­பா­டும் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.