ராதாகிருஷ்ணன்: இன்று 18 வயதுக்கு மேலானோருக்கு தடுப்பூசி போடுவது சந்தேகம்தான் 'அடுத்த பத்து நாள்களை கவனமாக கடக்கவேண்டும்'

ராதாகிருஷ்ணன்: இன்று 18 வயதுக்கு மேலானோருக்கு தடுப்பூசி போடுவது சந்தேகம்தான் 'அடுத்த பத்து நாள்களை கவனமாக கடக்கவேண்டும்'

2 mins read
0c3a3abd-78fd-421a-bdb3-acfcadae643d
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா இரண்­டா­வது அலையின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இதனால் அடுத்த 10 நாள்­க­ளுக்கு பொதுமக்­கள் எச்­ச­ரிக்­கை­யா­க­வும் கவ­ன­மா­க­வும் இருக்­க­வேண்­டும் என்­றும் சுகா­தா­ரத் ­துறைச் செய­லாளர் ராதா­கி­ருஷ்­ணன் அறிவுறுத்தி­ உள்­ளதாக ஏஷியாநெட் ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.

அத்துடன், "மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

"அதற்கான முன்பதிவும் தொடங்கிவிட்ட நிலையில், அரசு கொள்முதல் ஆணை பிறப்பித்த ஒன்றரை கோடி தடுப்பூசிகள் எப்போது வந்து சேரும் என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

"அதனால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது சந்தேகம்தான். காலதாமதம்கூட ஏற்படலாம்," என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்குத் தேவையான இருப்பு உள்ளதால் அவர்களுக்கு வழக்கம்போல் தடுப்பூசி போடும் பணி தொடரும். அதில் எந்த சந் தேகமும் இல்லை," என்றார்.

சென்னை எழும்­பூர் தாய்­ சேய் நல மருத்­து­வ­ம­னை­யில் 250 ஆக்­சி­ஜன் வச­தி­க­ளு­டன் கூடிய படுக்கை வச­தி­களைச் சுகா­தா­ரத் ­துறைச் செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தொடங்கி வைத்­தார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "தமி­ழ­கத்தைப் பொறுத்­த­வரை முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும் சிறு ஊர­டங்கு போன்று பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் விதிக்கப் பட்டுள்ளன. அடுத்­து­வ­ரும் 10 நாள்­களுக்கு மக்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்கவேண்­டும்," என கூறினார்.

கொரோனா தொற்று ஏற்­பட்ட அனை­வ­ருக்­கும் ரெம்­டெ­சிவிர் மருந்து அவ­சி­யம் இல்லை என்று கூறிய அவர், "நோய் பாதித்த 30% நோயா­ளி­க­ளுக்கு மட்­டுமே இந்த மருந்து தேவைப்­படும்.

"மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்பட்டு வருவதால் அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என்றும் வலியுறுத்தி உள்ளார்.