தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.100 கோடி போதைப் பொருள் பறிமுதல்

1 mins read
a768bc4d-9578-453b-afda-09bb6ddebb7e
கைது செய்யப் பட்ட டான் சானியா நாட்டைச் சேர்ந்த இருவரு டன் அதி காரிகள். -

சென்னை: சென்னை விமான நிலை­யத்­தில் நூறு கோடி பெறு­மா­ன­முள்ள போதைப் பொருள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

சென்ற வியா­ழக்­கி­ழமை இரவு தென் ஆப்­பி­ரிக்­கா­வின் ஜோஹா­னஸ் பர்க் நக­ரி­லி­ருந்து 'கத்­தார் ஏர்­வேஸ்' விமா­னம் மூலம் வந்த இரு­வர் மீது சுங்­கத் துறை அதி­கா­ரி­க­ளுக்கு சந்­தே­கம் ஏற்­பட்­டது.

டான்­சா­னியா நாட்­டைச் சேர்ந்த டேபோரா எலையா, 46, என்ற பெண், பீலிக் ஒப­டியா, 45, ஆகிய இரு­வ­ரும் மருத்­துவ சிகிச்­சைக்­காக இந்­தியா வந்­துள்­ள­தாக அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­னர்.

கர்­நா­டகா மாநி­லத்­தில் பெங்­க­ளூ­ரில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல வேண்­டும். தென் ஆப்­பி­ரிக்­கா­வி­லி­ருந்து பெங்­க­ளூ­ருக்கு நேர­டி­யாக வரும் விமா­னத்­தில் டிக்­கெட் கிடைக்­கா­த­தால் சென்னை வழி­யாக பெங்­க­ளூரு செல்ல உள்­ளோம் என்­றும் அவர்­கள் கூறி­னர்.

ஆனால் அவர்களின் பதிலில் திருப்தி அடையாத சுங்கத் துறையினர், இருவர் வைத்திருந்த 'ஸ்டோலர் பேக்கை' சோதனை யிட்டதாக தினமலர் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

அப்போது, அதில் வெள்ளை நிற தூள் 15.6 கிலோ எடையில் இருந்தது. அந்தத் தூளை, ஆய் வகத்திற்கு அனுப்பி பரிசோதித்ததில் அது சுத்தமான ஹெராயின் போதை பொருள் என்பது தெரிந்தது. அதன் மதிப்பு 100 கோடி ரூபாயாகும்.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.