ஆந்திர வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழப்பு

1 mins read
c47f1bb5-981a-4764-af64-e1975dcdf0ef
-

அமராவதி: ஆந்­திர மாநி­லம் கடப்பா மாவட்­டத்­தில் ஜெலட்­டின் குச்­சி­கள் வெடித்து 10 கூலி தொழி­லா­ளர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

கடப்பா மாவட்­டத்­தில் உள்ள மாமி­லப்­பள்ளி கிரா­மத்­தில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான சுண்­ணாம்­புக்­கல் வெட்டி எடுக்­கும் குவாரி உள்­ளது. சுண்­ணாம்­புக்­கல் வெட்டி எடுக்­கும் பணி­யில் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக வெளி­யூர்­க­ளி­லி­ருந்து ஜெலட்­டின் குச்­சி­களை வர­வ­ழைப்­பது வழக்­கம்.

அதே வகை­யில் நேற்­றும் ஜெலட்­டின் குச்­சி­கள் வர­வ­ழைக்­கப்­பட்டு லாரி­யில் இருந்து இறக்கி வைக்­கப்­பட்­டன. அப்­போது எதிர்­பா­ரா­த­வி­த­மாக ஜெலட்­டின் குச்சி ஒன்று வெடித்து விபத்து ஏற்­பட்­டது.

விபத்­தில் ஏரா­ள­மான அள­வில் ஜெலட்­டின் குச்­சி­கள் தொடர்ந்து வெடித்து அந்­தப் பகுதி போர்க்­க­ளம் போல் மாறி­யது.

விபத்­தில் ஜெலட்­டின் குச்­சி­களை இறக்­கிக் கொண்­டி­ருந்த தொழி­லா­ளர்­கள் 10 பேர் உடல் சிதறி மர­ண­ம­டைந்­த­னர். மேலும் சிலர் படு­கா­யம் அடைந்து மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

விபத்து பற்­றிய தக­வ­ல­றிந்த கடப்பா மாவட்ட போலிஸ் அதி­காரி அன்பு ராஜன் உத்­த­ர­வின்­பே­ரில் அங்கு சென்­றுள்ள போலி­சார் வழக்­குப் பதிவு செய்து விசா­ர­ணையை துவக்கி உள்­ள­னர்.