மேற்கு வங்கத்தில் பாஜக போராட்டம்: வானதி சீனிவாசன் கைது

மேற்கு வங்கத்தில் பாஜக போராட்டம்: வானதி சீனிவாசன் கைது

1 mins read
635ad6a8-e54a-450a-979a-c9e78037db9e
கோல்கத்தாவில் கைதான வானதி சீனிவாசன். படம்: சமூக ஊடகம் -

கோல்­கத்தா: நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி தோற்­ற­தால் விரக்­தி­யில் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சித் தொண்­டர்­கள் வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதற்­குப் பதி­ல­டி­யாக பாஜக தொண்­டர்­களும் வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­தாக அங்­கி­ருந்து வரும் தக­வல்­கள் தெரி­வித்­தன. மாநி­லத்­தின் பல இடங்­களில் வெடித்த மோத­லால் சுமார் 14 பேர் கொல்­லப்­பட்­டி­ருப்­ப­தாக மேற்கு வங்க போலி­சார் தெரி­விக்­கின்­ற­னர். அவர்­களில் 10 பேர் பாஜக தொண்­டர்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.

மேற்கு வங்க வன்­மு­றை­யைக் கண்­டித்து தலை­ந­கர் கோல்­கத்­தா­வில் வெள்­ளிக்­கி­ழமை பாஜக போராட்­டம் நடத்தியது. இதில் பங்­கேற்ற பாஜக மக­ளிர் அணி தேசிய தலை­வ­ரும் கோவை தெற்­குத் தொகுதி எம்­எல்­ஏ­வு­மான வானதி சீனி­வா­சன், பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரூபா கங்­குலி, மேற்கு வங்க மாநில பாஜக மக­ளிர் அணித் தலை­வர் அக்னி மித்ரா பால் உள்­ளிட்­டோரை போலி­சார் கைது செய்­த­னர்.