கட்சிப் பாகுபாடு இன்றிப் பணியாற்ற ஸ்டாலின் அழைப்பு

கட்சிப் பாகுபாடு இன்றிப் பணியாற்ற ஸ்டாலின் அழைப்பு

2 mins read
6d898187-8dca-4a8c-81af-da08e73db862
மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம் -

"கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது"

சென்னை: கொரோனா கிரு­மித்­தொற்று பேரி­ட­ரில் இருந்து மக்­க­ளைப் பாது­காப்­பதே தமி­ழக அர­சின் முதன்­மைப் பணி என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் உறுப்­பி­னர்­க­ளாக பொறுப்­பேற்­றுக் கொண்ட புதிய மக்­கள் பிர­தி­தி­நி­தி­க­ளுக்கு அவர் நேற்று முன்­தி­னம் தமது வாழ்த்­து­களை தெரி­வித்­தார்.

பின்­னர் பேர­வை­யில் உரை­யாற்­றிய அவர், தமி­ழ­கத்தை மீட்க கட்­சிப் பாகு­பாடு இன்றி அனை­வ­ரும் பணி­யாற்ற வேண்­டும் என வேண்­டு­கோள் விடுத்­தார்.

"இந்­திய ஒன்­றி­யம் முழு­வ­தும் கொரோனா தொற்­றின் இரண்­டா­வது அலை கடும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்ள நிலை­யில், தமி­ழ­கத்­தி­லும் அதன் தாக்­கம் கடு­மை­யாக இருப்­பதை உணர்ந்­துள்­ளோம்.

"தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­து­டன் இந்த தடைக்­கா­லத்­தில் மக்­கள் பொரு­ளா­தார நெருக்­க­டியை சமா­ளிக்­கும் வகை­யில் ஒவ்­வொரு குடும்ப அட்­டைக்­கும் தலா 2 ஆயி­ரம் ரூபாய் வழங்­கப்­ப­டு­கிறது. தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உயிர்­வாயு, படுக்கை வச­தி­கள், மருந்­து­கள் ஆகி­யவை தடை­யின்­றிக் கிடைப்­ப­தற்­கான முயற்­சி­கள் போர்க்­கால அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன," என்­றார் முதல்­வர் மு.க. ஸ்டா­லின்.

நிலை­மையை முழு­மை­யாக கட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்­கும் மக்­க­ளுக்கு ஏற்­படும் நெருக்­க­டி­க­ளைத் தவிர்ப்­ப­தற்­கும் அரசு முழு­மை­யான அர்ப்­ப­ணிப்­பு­டன் செயல்­பட்டு வரு­வ­தாக குறிப்­பிட்ட அவர், அர­சுத்­துறை அதி­கா­ரி­கள், முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளான மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரும் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த தன்­ன­லம் கரு­தா­மல் மக்­க­ளைக் காக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தார்.

தேர்­தல் களத்­தில் வெவ்­வேறு கூட்­ட­ணி­களில் வெவ்­வேறு கட்சி சார்ந்­த­வர்­க­ளாக களம் கண்டு வென்றி­ருந்­தா­லும் மக்­கள் நலன் காப்­ப­தில் ஒரு­மித்த சிந்­த­னை­யு­டன் கட்­சிப் பாகு­பா­டின்றி பணி­யாற்ற வேண்­டிய கட­மை­யும் பொறுப்­பும் நடப்பு எம்­எல்­ஏக்­க­ளுக்கு உள்­ளது என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

எம்­எல்­ஏக்­கள் தங்­கள் தொகு­தி­களில் கொரோனா தொற்­றுப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களில் தொய்வு அல்­லது நெருக்­கடி ஏற்­பட்­டால் உட­ன­டி­யாக அர­சின் கவ­னத்­துக்­குக் கொண்­டு­வர வேண்­டும் என கேட்­டுக்கொண்ட அவர், மக்­க­ளைப் பாது­காப்­ப­தில் தமி­ழக அரசு உறு­தி­யான செயல்­பாட்டை மேற்­கொள்­ளும் எனும் உத்­த­ர­வா­தத்தை அளிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.