சென்னை: தமிழக உயர் கல்வித்துறை மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயல்படும் என்று அத்துறையின் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
"புதிய கல்விக்கொள்கையைப் பற்றி பலமுறை பேசி இருக்கிறேன். ஏற்கெனவே இது தொடர்பாக தமிழக முதல்வரும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"இப்போது உயர்கல்வித்துறை செயலாளரும் புதிய கல்விக்கொள்கையில் இருக்கக்கூடிய குறைகளை பற்றி ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறார்.
"அதை எல்லாம் முழுமையாக ஆய்வு செய்து நிச்சயமாக மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் திமுக அரசு செயல்படும்.
"புதிய கல்விக் கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது," என்று நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் பேசியபோது அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

