இளைஞர்களை அதிகம் தாக்கும் தொற்று

இளைஞர்களை அதிகம் தாக்கும் தொற்று

2 mins read
f05af5fb-7e46-43bf-aa7c-26b16d53c76b
-

சென்னை: தமி­ழ­கத்­தில் நேற்று 24 மணி நேர நில­வ­ரப்­படி தின­சரி தொற்று எண்­ணிக்கை 30,000ஐத் தாண்­டி­யுள்­ளது. 30,355 பேருக்­குத் தொற்று பாதிப்பு இருப்­பது நேற்று உறுதி செய்­யப்­பட்­டது. 293 கொரோனா மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இது­வரை அங்கு 14,68,864 தொற்று பதி­வா­கி­யுள்­ளது. சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 1,72,735. மாண்­டோர் எண்­ணிக்கை 16,471.

குறிப்­பாக சென்னை, செங்­கல்­பட்டு, கோயம்­புத்­தூர், திரு­வள்­ளூர் ஆகிய மாவட்­டங்­களில் மட்­டும் 46% புதிய தொற்­றுப் பாதிப்பு பதி­வா­கி­யுள்­ளன. தொற்­றுக்­குப் பலி­யா­ன­வர்­க­ளில் பாதிப்­பேர் இந்த மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

சென்­னை­யில் மட்­டும் 7,564 புதிய தொற்­றும் 89 தொற்று மர­ண­மும் பதி­வா­கி­யுள்­ளன. அடுத்­த­ப­டி­யாக செங்­கல்­பட்­டில் 2,670 புதிய தொற்­று­களும் 28 தொற்று மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. கோயம்­புத்­தூ­ரில் தொற்­றால் 2,636 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். 18 பேர் பலி­யா­கி­னர். திரு­வள்­ளூ­ரில் 1,344 புதிய தொற்­று­களும் 21 தொற்று மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.

மது­ரை­யில் 1,172 பேரும் கன்­னி­யா­கு­ம­ரி­யில் 1,076 பேரும் ஈரோட்­டில் 961 பேரும் திருச்­சி­யில் 879 பேரும் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தொற்­றுக்­குப் பலி­யா­ன­வர்­களில் 131 பேர் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் 162 பேர் அர­சாங்க மருத்­துவமனை­க­ளி­லும் சிகிச்சை பெற்­ற­வர்­கள். மாண்­ட­வர்­களில் நால்­வர் 20 ல் இருந்து 30 வய­துப் பிரி­வைச் சேர்ந்­த­வர்­கள்.

தமி­ழ­கத்­தில் எவ்­வித நோய்­க­ளுக்­கும் பாதிக்­கப்­ப­டாத இளை­யர்­கள் பலர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­யுள்­ள­தாக தர­வு­கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஒன்­றரை மாத கால­மாக உடல் ஆரோக்­கி­யத்­து­டன் உள்ள இளை­யர்­கள் தொற்­றுப் பாதிப்­புக்கு ஆளாகி தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­ப­டு­வது அதி­க­ரித்­துள்­ள­தாக சென்னை கீழ்ப்­பாக்­கம் மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனை தலை­வர் டாக்­டர் வசந்­த­மணி தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் செங்­கல்­பட்டு, கோயம்­புத்­தூர், காஞ்­சி­பு­ரம் உள்­ளிட்ட ஏழு மாவட்­டங்­களில் தீவி­ரக் கண்­கா­ணிப்­புப் பிரி­வில் ஆக்­சி­ஜ­னு­டன் கூடிய படுக்­கை­க­ளுக்கு கடும் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் தமி­ழ­கத்­தில் இரண்­டாம் அலை­யில் மட்­டும் இது­வரை 3,070 காவ­லர்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இதில், 70 காவ­லர்­கள் சிகிச்சை பல­ன­ளிக்­கா­மல் பலி­யா­கி­யுள்­ள­னர்.

திருச்சி மாவட்­டத்­தில் நேற்று 879 பேருக்கு தொற்று உறு­தி­யா­கி­யுள்­ளது. 12 பேர் பலி­யாகிவிட்­ட­னர். இங்கு தின­சரி பாதிப்­பும் இறப்பு விகி­த­மும் அதி­க­ரித்­துள்­ளது. அவர்­களில் 32 முதல் 40 விழுக்­காட்­டி­னர் 40 வய­துக்கு உட்­பட்ட இளம் வய­தி­ன­ராக இருப்­ப­தாக மாவட்ட சுகா­தா­ரப் பணி­கள் துணை இயக்­கு­னர் ராம்­க­ணேஷ் கூறி­னார்.