தொற்றுக்கு எதிராக தமிழ் மருத்துவ முறையை நாடும் மக்கள்

தொற்றுக்கு எதிராக தமிழ் மருத்துவ முறையை நாடும் மக்கள்

2 mins read
2065bd10-a586-4b86-bc01-da2ecb2d1af2
-

திருச்சி: கொரோனா தொற்று இரண்­டா­வது அலை தீவி­ர­ம­டைந்து வரும் நிலை­யில், தொற்று ஏற்­ப­டா­மல் தடுக்­க­வும் உட­லில் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்­க­வும் பொது­மக்­கள் தற்­போது அதிக அள­வில் தமிழ் மருத்­துவ முறை­யான சித்த மருத்­து­வத்­தில் ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர்.

கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்டு பல்­வேறு அரசு மருத்­து­வ­மனை­களில் சிகிச்சை பெறு­ப­வர்­க­ளுக்கு அலோ­பதி மருந்­து­க­ளு­டன் கப­சுர குடி­நீர், தாளி­சாதி சூர­ணம் போன்ற சித்த மருந்­து­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இந்­த­நி­லை­யில், மாநி­லம் முழு­வ­தும் 12 இடங்­களில் கொரோனா சிகிச்­சைக்கு இயற்கை முறை மருத்­துவ மையங்­கள் அமைக்­கப்­படும் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது. இந்த அறி­விப்பு கொரோனா சிகிச்­சை­யில் சித்த மருத்­து­வத்தை உள்­ள­டக்­கிய இயற்கை முறை மருத்­து­வத்­துக்கு அளிக்­கப்­பட்­டுள்ள முக்­கி­யத்­து­வத்­தையே காட்­டு­கிறது என்­கின்­ற­னர் சித்த மருத்­து­வர்­கள்.

சித்த மருத்­து­வத்­தின் பலன்­கள் குறித்து திருச்சி மாவட்ட சித்த மருத்­துவ அலு­வ­லர் எஸ்.காம­ராஜ் கூறு­கை­யில், "நில­வேம்பு குடி­நீர் டெங்கி காய்ச்­ச­லுக்கு நன்­ம­ருந்து. அதைப்­போ­லவே இப்­போது நம்மை அச்­சு­றுத்­தி­வ­ரும் கொரோனா தொற்று சிகிச்­சை­யில் சித்த மருத்­து­வம் நல்ல பலன் அளித்து வரு­கிறது," என்­றார்.

"தொற்று பாதிப்­பில் இருந்து நம்­மைக் காத்­துக்­கொள்ள நம் உட­லில் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரித்து சுவா­சப் பிரச்­சி­னை­யைப் போக்க வேண்­டும். அதற்கு தாளி­சாதி, அமுக்ரா ஆகிய சூர­ணங்­களும், கப­சுர குடி­நீர், நில­வேம்பு குடி­நீர், நெல்­லிக்­காய் லேகி­யம், உள்­ளிட்ட பல மருந்­து­களும் அரசு மருத்­துவ மனை­களில் இல­வ­ச­மா­கக் கிடைக்­கின்­றன," என்­றார் திரு காம­ராஜ்.

தமி­ழக அர­சின் உத்­த­ர­வைத் தொடர்ந்து திருச்­சி­யில் ஓரி­ரு­நாளில் 150 படுக்­கை­க­ளு­டன் கூடிய கொரோனா சித்த மருத்­துவ சிகிச்சை மையம் தொடங்­கப்­படும்.

இங்கு நோயா­ளி­க­ளுக்கு இரு­வேளை கப­சுர குடி­நீர், நில­வேம்பு குடி­நீர், வேது பிடித்­தல் மற்­றும் இதர சளி, இரு­மல், காய்ச்­சல் போன்­ற­வற்­றுக்கு தேவை­யான சித்த மருந்­து­கள் மூலம் சிகிச்சை அளிக்­கப்­படும் என்­றார் அவர்.

கொரோனா பாதிப்­புக்கு மீண்­டும் சித்த மருத்­துவம் பார்க்கப்படும் நிலை­யில் தலை­மைச் செய­ல­கத்­தில் சித்த மருத்­து­வர் வீர­பா­பு­வு­டன் மருத்­து­வத்­துறை அமைச்­சர் மா.சுப்பி­ர­ம­ணி­யன் ஆலோ­சனை மேற்­கொண்­டுள்­ளார்.