கடலூர் தீ விபத்தில் நால்வர் பலி

கடலூர் தீ விபத்தில் நால்வர் பலி

1 mins read
8b6a80b3-3f6c-4cbe-a0e0-b308b95e24b0
-

கட­லூர்: சிப்­காட் தொழிற்கூட வளாகத்தில் உள்ள பூச்­சிக்­கொல்லி மருந்து தயா­ரிக்­கும் தனி­யார் தொழிற்­சா­லை­யில் நேற்று காலை கொதி­க­லன் வெடித்து தீ விபத்து ஏற்­பட்­டது.

இந்த தீ விபத்­தில் நான்கு பேர் உயி­ரி­ழந்­த­னர். 17 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். மேலும் ரசா­ய­னக் கசிவு கார­ண­மாக அப்­பகு­தி­யில், கண் எரிச்­சல் ஏற்­பட்­டுள்­ள­தாக பொதுமக்கள் கூறு­கின்­ற­னர். தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­சர் சி.வெ.கணே­சன், கட­லூர் அரசு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு ஆறு­தல் கூறி­னார். உயி­ரி­ழந்­தோ­ரின் குடும்­பங்­க­ளுக்கு தலா ரூ.3 லட்­ச­மும், காய­ம­டைந்தோருக்கு தலா ரூ.1 லட்­சமும் நிதி உதவி வழங்­கப்­படும் என்று முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.