சென்னை: கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும். நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்றும் அரிசி மானியத் தொகைகளைவிடுவிக்க வேண்டும்.
மாநில அரசின் கடன் வாங்கும் அளவை உற்பத்தி மதிப்பில் இருந்து மேலும் ஒரு விழுக்காடு உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய இந்த மூன்று நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும் என்று அவர், அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டார்.

