மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசு வரர் கோயிலிலிருந்து நாள்தோறும் அரசு மருத்துவமனைக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2,000 உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ. தளபதி, நோயாளி மற்றும் உறவினர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். முதல் நாளில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சாதம் என்ற வகையில் உணவுப் பொட்ட லங்கள் விநியோகிக்கப்படுகிறது.
உணவுப் பொட்டலங்களுடன் குடிநீர், கபசுர குடிநீர், முகக் கவசம் போன்றவையும் வழங்கப்படும்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்கள் சார்பில் அருகில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்க வேண்டும் என்று இந்து அற நிலையத்துறை உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவின்ேபரில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கோயில் களிலிருந்து மொத்தம் 6,000 பொட்டலங்கள் நாள்தோறும் விநியோகிக்கப்படுவதாக 'த இந்து' இணையம் தெரிவித்தது.
மதுரை வட்டாரத்துக்கான இந்து சமய அறக்கட்டளை கூட்டு ஆணையரான சி. ஸ்ரீகுமரதுரை, பொது முடக்கத்தால் உணவு கிடைப்பது சிரமமாகியிருப்பதால் மதுரை வட்டாரத்தில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் செயல்படும் 57 கோயில்களிலிருந்து கொவிட்-19 நோயாளிகளுக்கும் சுகாதாரப் பராம ரிப்பாளர்களுக்கும் வீடில்லாதவர் களுக்கும் தினமும் 6,000 பொட்டலம் விநியோகிக்கப்படும்," என்றார்.
கூடலழகர் பெருமாள் கோயிலின் நிர்வாகிகள், அரசு மருத்துவ மனைக்கும் ஆலயம் அருகே உள்ள வீடற்றவர்களுக்கும் 150 உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலின் நிர்வாக அதிகாரி எம். ராமசாமி, அரசு மருத்து வமனையில் உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கு கோயிலிலிருந்து 275 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவித் தார்.