உச்சத்தை தொட்டு அச்சத்தை கிளப்பும் கொரோனா தொற்று

உச்சத்தை தொட்டு அச்சத்தை கிளப்பும் கொரோனா தொற்று

2 mins read
c9620b49-28af-4a1c-8e91-82ce7373cb1d
-

சென்னை: தமிழ்­நாட்­டில் இது­வரை இல்­லாத அள­வுக்கு கொரோனா தொற்று உச்­சத்தை தொட்டு பெரும் அச்­சத்தை கிளப்பி வரு­கிறது.

அந்த மாநி­லத்­தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கிரு­மித்­தொற்று கூடி வரு­வ­தால் 14 நாட்­கள் முழு ஊர­டங்கு இப்போது நடப்­புக்கு வந்தி­ருக்­கிறது. அத்­தி­யா­வ­சிய பணி­களைத் தவிர அனைத்­துக்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழகத்தில் சனிக்­கி­ழமை ஒரே நாளில் 303 பேர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­னர். புதி­தாக 33,658 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அர­சாங்­கத் தக­வல்­கள் நேற்று தெரி­வித்­தன.

அந்த மாநி­லத்­தில் கொவிட்-19 தொற்­று காரணமாக பாதிக்­கப்­பட்ட மக்களின் மொத்த எண்­ணிக்கை 15.7 லட்சமாக உயர்ந்­துள்­ளது.

இது­வ­ரை­ 17,359 பேர் மர­ண­மடைந்து­விட்­ட­னர். குண­ம­டைந்த வர்­க­ளின் எண்­ணிக்கை 13.4 லட்ச மாக உள்­ளது. 207,789 பேர் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள்.

மாநி­லம் முழு­வ­துமே மருத்­து­வ­மனை­களில் போதிய இடம் இல்­லா­ம­லும் ஆக்­சி­ஜன் வச­தி­கள் இல்­லா­ம­லும் பெரும் சங்­கட நிலை காணப்­ப­டு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வின் பல மாநி­லங்­களில் கொவிட்-19 தொற்று நில­வ­ரம் பற்றி பரி­சீ­லித்த மத்­திய சுகா­தார அமைச்சு, தமிழ்­நாடு நில­வரம் கவலை அளிப்­ப­தாக இருக்­கிறது என்று குறிப்­பிட்டு உள்­ளது.

அந்த மாநி­லத்­தில் கடந்த பல நாட்­க­ளா­கவே பாதிக்­கப்­ப­டு­வோரின் எண்­ணிக்­கை­யும் மரண எண்­ணிக்­கை­யும் கூடி வரு­வதை மத்­திய அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யது.

இவ்­வே­ளை­யில், நோயா­ளி­களு­டன் மருத்­து­வ­ம­னைக்கு வரும் வேறு யாரை­யும் அனு­ம­திக்­கக் கூடாது என்று மாநி­லத்­தில் செயல்­படும் கொவிட்-19 மருத்­து­வ­மனைகள் அனைத்­திற்கும் சுகா­தா­ரத் துறை உத்­த­ர­விட்டு உள்­ளது.

தனி­ வார்­டு­களில் நோயா­ளி­களு­டன் உற­வி­னர்­களும் தங்­கு­வதால் பெரும் பிரச்­சி­னை­கள் ஏற்­படு­வ­தாக புகார்­கள் கிளம்­பி­யதை அடுத்து அந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு இருக்­கிறது.

கொவிட்-19 நிபந்­த­னை­களை மக்கள் மீற­வில்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த அதி­கா­ரி­கள் முயற்­சி­களை முடுக்­கி­விட்டு இருக்­கி­றார்­கள். நிபந்­த­னை­களை மீறி சாலை­யில் நடந்­து­கொண்­ட­தாக வெள்­ளிக்­கி­ழமை மட்­டும் 21,353 பேர் மீது குற்­றப்­ப­திவு செய்­யப்­பட்­டது.

தலை­ந­கர் உள்­ளிட்ட மாநி­லத்­தின் பல பகு­தி­க­ளி­லும் பொது­மக்கள் நட­மாட்­டத்­தை­யும் வாகன போக்­கு­வ­ரத்­தை­யும் ஆளில்லா வானூர்­தி­கள் மூல­மா­க­வும் அதி­கா­ரி­கள் கண்­கா­ணிக்­கி­றார்­கள்.

திருப்­பூர் மாவட்­டம் பெரு­மா­நல்­லூர் பகு­தி­யில் விதி­மீ­றல்­கள் தொடர்­வ­தாக புகார் வந்­ததை அடுத்து போலி­சார் ஆளில்லா வானூர்­தி­கள் மூலம் அந்­தப் பகு­தி­யைக் கண்­கா­ணிக்­கத் தொடங்­கி­னர். அதை அறிந்­த­தும் பொது­மக்­கள் சாலை­களை விடுத்து அவ­ர­வர் வீட்­டுக்­குள் ஓடி­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதற்கிடையே, தமிழகத்தில் பற்றாக்குறையைப் போக்க 2,000 மருத்துவர்கள், 6,000 தாதியர் மற்றும் 2,000 தொழில்நுட்ப பணி யாளர்கள் வேலையில் சேர்க்கப்படு வார்கள் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேலத்தில் சனிக்கிழமை செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரே நாளில் வரலாறு காணா அளவுக்கு 303 பேர் பலி; 33,658 பேர் பாதிப்பு