சென்னை: மதுரையில் முகமது இக்பால் என்பவருக்குச் சொந்தமான நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
முகம்மது இக்பால் என்ற சந்தேகப்பேர்வழி ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் நடந்து வரும் விசாரணைகளையொட்டி அந்தச் சோதனைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சந்தேகநபர் ஐஎஸ், ஹிஸ்ப்-அத்-தஹிர் அமைப்புகளின் சித்தாந்தங்களை ஆதரிக்கும் தீவிரவாதி என்று நம்பப்படுகிறது. சமூக ஊடகத் தளத்தில் சட்டவிரோத தகவல்களைப் பதிவேற்றியதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் சென்ற ஆண்டு தமிழ்நாடு போலிசார் அந்தச் சந்தேகப்பேர்வழி மீது வழக்குப் பதிந்தனர்.
அந்த விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு இப்போது மேற்கொண்டு உள்ளது.

