ரயில் நிலையத்தில் வெளி மாநில ஊழியர்கள் தவிப்பு

ரயில் நிலையத்தில் வெளி மாநில ஊழியர்கள் தவிப்பு

1 mins read
1fb613a2-b9f8-45c7-9133-7a35faa382df
-

சென்னை: தமிழ்­நாட்­டில் வேலை செய்­யும் நூற்­றுக்­க­ணக்­கான வெளி­மா­நில ஊழி­யர்­கள் தொடர்ந்து சென்னை சென்ட்­ரல் ரயில் நிலை­யத்­தில் கூடி வரு­வ­தா­க­வும் அவர்­கள் ஊர் திரும்ப ரயில்­களில் இடம் கிடைக்­கா­த­தால் நிலை­யத்­தி­லேயே தவிப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

சில ஊழி­யர்­கள் கடந்த ஆறு நாட்­க­ளாக ரயில் நிலை­யத்­தி­லேயே காத்துக் கிடப்­ப­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சென்­னை­யில் இருந்து இரண்டு கொவிட்-19 சிறப்பு ரயில்­கள் பிற்­பகல் நேரத்­தி­லும் இரவு நேரத்­தி­லும் புறப்­ப­டு­கின்­றன. அவற்­றில் பய­ணச்சீட்­டு­க­ளைப் பெறு­வது கடைசி வரை­யில் பெரும் போராட்­ட­மாக இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சில ஊழி­யர்­கள் இரண்டு முறை முன்­ப­திவு செய்­தும் பெரும் பணத்தை இழக்­கி­றார்­கள் என்­று சிலர் தெரி­வித்­த­னர்.

முக­வர்­க­ளைச் சார்ந்­திருப்­ப­தால் பலர் ஏமாற்­றப்­ப­டு­வதா­க­வும் கூறப்­படு­கிறது. முன்பதிவு செய்து இருந்தாலும் பலருக்கும் இடம் கிடைக்காமல் போவதாகவும் கூறப் படுகிறது.