மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலைய விவேக நகர் திட்ட பணியின்போது பல கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளை நடந்ததாக தமிழக முதல்வருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டு உள்ளது.
சிபிசிஐடி அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி என்பவர் கோரி உள்ளார்.

