தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் விநியோகம்: நாளை முதல் நடப்புக்கு வருகிறது

தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் விநியோகம்: நாளை முதல் நடப்புக்கு வருகிறது

2 mins read
4688e1ea-be56-43d2-aee8-7858b539b95d
நேரு விளை­யாட்டு அரங்­கில் சனிக்கிழமை ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கிய தற்கு முன்பாகவே பெருங் கூட்டம் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம்: ஊடகம் -

சென்னை: கொவிட்-19 கிருமி தொற்றி மருத்­து­வ­ம­னை­யில் ஆக்சி­ஜன் சிகிச்­சை­யில் உள்ள நோயா­ளி­க­ளுக்குப் பயன்­படும் ரெம்­டெ­சிவிர் மருந்து தனி­யார் மருத்­து­வ­மனை மூல­மாகவும் இனி விநி­யோ­கிக்­கப்­படும் என்று தமி­ழக அரசு அறி­வித்து இருக்­கிறது.

இந்த மருந்து அரசு மருத்­து­வ­மனை­களில் சிகிச்­சை பெறும் நோயா­ளி­க­ளுக்­குப் போதிய அள­வில் வழங்­கப்­பட்டு வரு­கிறது.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் உள்ள நோயா­ளி­க­ளுக்கு, சென்னை, கோயம்­புத்­தூர், சேலம், திருச்சி, மதுரை, திரு­நெல்­வேலி ஆகிய இடங்­களில் உள்ள விற்பனை மையங்­களில் நேர­டி­யாக நோயா­ளி­க­ளின் குடும்­பத்­தி­னர் மூல­மாக இந்த மருந்து வழங்­கப்­பட்டு வரு­கிறது.

நாளை முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவ மனைகளும் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் தங்கள் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, ரெம்டெசி விர் மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.

இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவ மனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று மருந் தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கான இணையத்தளம் குறித்த விவரங்கள் உடனே வெளி யிடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்ட முடிவில் அறிவிக்கப்பட்டது.

அதிக ரெம்­டெ­சி­விர் தேவை என்று மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

இதற்­கி­டையே, ரெம்­டெ­சி­விர் மருந்­தைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயன்­ற­தன் தொடர்­பில் சென்­னை­யில் இதுவரை 24 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­களி­டம் இருந்து 234 ரெம்­டெ­சி­விர் மருந்துக் குப்­பிகள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டதாகவும் போலிஸ் தெரி­வித்­தது.