சென்னை: கொரோனா நோயை கட்டுப்படுத்தவும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இப்பணிகளுக்காக நிதி வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு எவ்வித பாகுபாடும் இன்றி பல்வேறு தரப்பினரும் நிதியை வாரி வழங்கி வருகின்றனர்.
சனிக்கிழமை தொடங்கி நேற்று காலை வரை திரண்ட நிதி விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு ள்ளது. சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ. 5 கோடி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிவாரண நிதிக்கு தன் விருப்புரிமை நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய், தன் ஒரு மாதச் சம்பளம் ஆகியவற்றுக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்
துறையின்கீழ் உள்ள 47 கோயில்களில் பணிபுரியும் 3,500க்கும் மேற்பட்ட பணியாளர்களின் மே மாதத்திற்குரிய சம்பளம் ரூ.50 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்க முன்வந்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ரவிச்சந்திரன் சிறையில் தான் வேலை செய்து பெற்ற சம்பளத்தில் ரூ.5 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ரூ.1 கோடி, சென்னை சில்க்ஸ் ரூ.1 கோடி, சென்னை பப்ளிக் ஸ்கூல் ரூ.1 கோடி, பட்டர்ஃபிளை நிறுவனம் ரூ.1 கோடி, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம், நடிகர் ஜெயம் ரவி ரூ.10 லட்சம், இயக்குநர் வெற்றிமாறன் ரூ.10 லட்சம் என பட்டியல் நீளுகிறது.
எதிர்த்தரப்பு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாச னும் ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
ஆளுநர் முதல் எதிர்த்தரப்பு அரசியல் தலைவர் வரை பாகுபாடின்றி அள்ளித் தருகிறார்கள்

