இரு மாதத்தில் 38 கர்ப்பிணிகள் கிருமித்தொற்றால் மரணம்

இரு மாதத்தில் 38 கர்ப்பிணிகள் கிருமித்தொற்றால் மரணம்

1 mins read
b9d02c57-a1ef-4b7e-932d-bec2a4cf11d9
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கடந்த இரு மாதங்­களில் 64 கர்ப்­பி­ணி­கள் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இவர்­களில் 38 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் மர­ண­மடைந்தவர்­கள். சென்­னை­யில் ஒரு மருத்­து­வ­ம­னை­யில் மட்­டும் ஏப்­ரல், மே மாதங்­களில் 9 கர்ப்­பி­ணி­கள் கொரோனா தொற்­றால் மாண்­டு­விட்­ட­னர். எழும்­பூர் அரசு தாய் சேய் நல மருத்­து­வ­

ம­னை­யில் கிரு­மித்­தொற்று முதல் அலை­யின்போது 800 கர்ப்­பி­ணி­கள் பாதிக்­கப்­பட்­டா­லும் அவர்­களில் ஐவர் மட்­டுமே உயி­ரி­ழந்­த­னர்.

ஆனால், 2வது அலை­யில் இரு மாதங்­களில் 200 கர்ப்­பி­ணி­க­ளுக்­குத் தொற்று ஏற்­பட்டு இம்மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில் அவர்­களில் ஐவர் ஏப்­ர­லி­லும் நால்­வர் இம்­மா­த­மும் மாண்டதாக மருத்­து­வ­ம­னை­ இயக்­குநர் விஜயா தெரி­வித்­துள்­ளார்.

குடும்­பத்­தில் யாருக்­கே­னும் கொரோனா அறி­கு­றி­கள் இருந்­தால் அந்த வீட்­டில் இருக்­கும் கர்ப்­பி­ணிப் பெண்கள் உட­ன­டி­யாக அரசு மருத்­து­வ­ம­னை­ உத­வி­யு­டன் அவர்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இடங்­க­ளுக்குச் சென்று தங்­களை பாது­காத்­துக்கொள்ள வேண்­டும் என இம்­ம­ருத்­துவமனை­யில் பணி­ புரியும் மருத்­து­வர் சாந்தி கூறினார்.