தமிழ்நாடு: பத்து நாள்களில் 10,669 சிறாருக்குத் தொற்று

தமிழ்நாடு: பத்து நாள்களில் 10,669 சிறாருக்குத் தொற்று

2 mins read
db5f6a68-3035-4d99-861e-e93897b72c28
-

சென்னை: தமிழ்­நாட்­டில் கடந்த பத்து நாள்­களில் மட்­டும் 10,000க்கு மேற்­பட்ட சிறார்­கள் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது பெற்­றோர்­க­ளி­டையே பேரச்­சத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கிறது.

தமி­ழ­கத்­தில் கடந்த சில நாள்­களாக அன்­றாட கொரோனா பாதிப்பு 30,000க்கு மேல் பதி­வாகி வரு­கிறது. கடந்த சனிக்­கி­ழமை புதி­தாக 33,658 பேரை கொரோனா தொற்­றிய நிலை­யில், மறு­நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை பாதிப்பு சற்று குறைந்து 33,181ஆகப் பதி­வா­னது. அதே வேளை­யில், சனிக்­கி­ழமை 303 பேர் தொற்­றால் மாண்­டு­போக, அதற்கு மறு­நாள் மரண எண்­ணிக்கை 311ஆகக் கூடி­யது.

இந்­நி­லை­யில், கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் 12 வய­துக்­குட்­பட்ட 1,264 சிறார்­கள் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த பத்து நாள்­களில் மட்­டும் 10,669 சிறார்­களை கொரோனா தொற்­றி­விட்­டது. குடும்ப உறுப்­பினர்­க­ளி­டம் இருந்து குழந்­தை­களுக்கு கொரோனா தொற்று மிக எளி­தா­கப் பர­வி­வி­டு­வ­தாக மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

தற்­பொ­ழுது கண்­ட­றி­யப்­படும் கொரோனா தொற்று பாதிப்­பு­களில் 40%, குடும்ப அள­வி­லான கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் மூல­மாக ஏற்­ப­டு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

கொரோனா இரண்­டா­வது அலை­யைக் கட்­டுப்­ப­டுத்த வரும் 24ஆம் தேதி காலை வரைக்­கும் முழு ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்டு, கடு­மை­யான விதி­மு­றை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன.

இந்­நி­லை­யில், நேற்­றுக் காலை­யில் இருந்து தமி­ழ­கத்­தில் மாவட்­டங்­க­ளுக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் பய­ணம் செய்ய மின்­ப­திவு முறை நடப்­புக்கு வந்­தது.

இதை­ய­டுத்து, பல்­வேறு இடங்­களி­லும் மாவட்ட எல்­லை­க­ளி­லும் போலி­சார் சோத­னைச் சாவ­டி­கள் அமைத்து தீவிர கண்­கா­ணிப்­புப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். திரு­ம­ணம், முக்­கிய உற­வி­ன­ரின் இறப்பு, மருத்­துவ சிகிச்சை, முதி­யோர்­க­ளுக்­கான தேவை போன்ற அத்­தி­யாவ­சிய பணி­க­ளுக்­குச் செல்­வோ­ருக்கு மட்­டும் அனு­மதி வழங்­கப்­ப­டு­கிறது.

மற்ற வாக­னங்­களில் செல்­வோர் தடுத்து நிறுத்­தப்­பட்டு, அவர்­க­ளி­டம் மின்­ப­திவு செய்­யப்­பட்ட ஆவ­ணங்­க­ளைச் சரி­பார்த்த பிறகே அனு­மதி அளிக்­கப்­ப­டு­கிறது. மின்­பதிவு செய்­யப்­ப­டாத வாக­னங்­களுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்டு, திருப்பி அனுப்­பப்­ப­டு­கின்­றன.

இத­னி­டையே, தமி­ழக சுகா­தாரத் துறை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், "தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் 159,706 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது. அதில் 33,181 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­னதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,598,216ஆக அதி­க­ரித்­துள்­ளது. மேலும் 21,317 குண­ம­டைந்ததை அடுத்து, மீண்­டோர் எண்­ணிக்கை 1,361,204ஆக அதி­க­ரித்­தது," எனக் கூறப்­பட்­டுள்­ளது.