வீட்டுக்கே வந்து தடுப்பூசி

வீட்டுக்கே வந்து தடுப்பூசி

1 mins read
b4441bf8-d190-4050-a60b-a332933a00c3
-

சென்னை: கொரோனா தடுப்­பூசி போட விண்­ணப்­பித்­தால் வீட்­டுக்கே நேரில் வந்து தடுப்­பூசி போடப்­படும் என்று சென்னை மாந­க­ராட்சி அறி­வித்­தி­ருக்­கிறது.

சென்னை மாந­க­ரில் நாள்­தோறும் பல ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 6,247 பேரைக் கிருமி தொற்றிவிட்டது.

கொரோனா நோயா­ளி­கள் அதி­க­ரித்­த­வண்­ணம் இருப்­ப­தால் மருத்­து­வ­ம­னை­களும் நிரம்பி வழி­கின்­றன. இத­னால் பல­ரும் வீடு­களி­லேயே தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படு­கிறது.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் குடி­யி­ருப்­ப­வர்­கள் விண்­ணப்­பித்­தால் வீட்­டுக்கே வந்து தடுப்­பூசி போடப்­படும் என மாந­க­ராட்சி அறி­வித்­துள்­ளது. இந்த வகை­யில் 45 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு மட்­டும் தடுப்­பூசி போடப்­படும்.

தடுப்­பூசி பெறத் தகு­தி­யான 30 பேருக்கு மேல் இருந்­தால் குறிப்­பிட்ட குடி­யி­ருப்பு அல்­லது நிறு­வ­னத்­திற்கே வந்து சிறப்­புத் தடுப்­பூசி முகாம் போடப்­படும்.

இதற்­காக விண்­ணப்­பிப்­போர் மற்­றும் நிறு­வ­னங்­கள், தங்­கள் பெயர், முக­வரி, மண்­ட­லம், வார்டு குறித்த விவ­ரங்­க­ளு­டன் இணை­யம் வழி­யாக மாந­க­ராட்­சிக்கு விண்­ணப்­பிக்­க­லாம் அல்­லது மாந­க­ராட்சி மண்­டல அதி­கா­ரி­களைத் தொடர்­பு­கொள்­ள­லாம்.