சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, டாக்டர் நா.எழிலன் (திமுக), டாக்டர் சி.விஜயபாஸ்கர் (அதிமுக), ஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), டாக்டர் சதன் திருமலைக்குமார் (மதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலைச் சிறுத்தைகள்), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), தி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ரா.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அவசர அவசியம் கருதி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்க, குழுவினர் அவ்வப்போது கூடி விவாதிப்பர்.

