நாகப்பட்டினம்: திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50,000 பணத்தை நன் ெகாடையாக வழங்கி உள்ளனர்.
அேதபோல், ஏழை மாணவர் ஒருவர் ரூ.5,000 பணத்தையும் திருநங்கைகள் ரூ.50,000 பணத்தை யும் முதல்வர் நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளனர்.
கொேரானா கிருமி முறியடிப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள், தொழிலதிபர்கள், அர சியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் நிதி அளித்து வருகின்றனர்.
அவ்வகையில், திருமணம் முடித்த ஷெரின் ராஜ்-சூர்யா தம்பதிகள் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயரைச் சந்தித்து முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 வழங்கினர்.
இதேேபால், கரூர் மாவட்டம், கோடாங்கிப்பட்டி கிராமத்தில் தையல்காரராக ராஜேந்திரன் என்ப வர் பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் ஜோதீஸ்வரன் பதினொன்றாம் வகுப்பில் படித்து வரும் நிலையில், தான் சைக்கிள் வாங்குவதற்காக சிறுகச் சிறுகச் சேமித்து வந்த ரூ.5,000 பணத்தை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் நன் கொடையாக வழங்கி மக்களை நெகிழவைத்துள்ளார்.
இதுகுறித்து ஜோதீஸ்வரன் கூறுகையில், "நான் 10,000 ரூபாயில் சைக்கிள் ஒன்று வாங்குவதற்காக கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்ைத சேர்த்து வந்தேன். அதேநேரம், கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் நேரத் தில் சைக்கிளைவிட மக்கள் நலனே முக்கியமாகத் தோன்றியதால் தயங்காமல் உதவினேன்," என்றார்.
சென்னையைச் சேர்ந்த திருநங்கைகளும் ரூ.50,000 பணத்தை வழங்கியுள்ளனர்.

