சென்னை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டா லின், அங்குள்ள கொரோனா நிலவரம், தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் களுடன் ஆலோசிக்க உள்ளார். நாளை மதுரை மாவட்டத்தில் இந்த ஆய்வுப் பணி தொடர உள்ளது.
இதற்கிடையே, நேற்று தொழில்துறையினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், தமிழகம் எங்கும் மத்திய அரசுடன் இணைந்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 142 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறியுள்ளார்.

