சென்னை: ஊரடங்கை கடுமைப் படுத்தவும் வாகனப் போக்குவரத்தைத் தடுக்கவும் தமிழக சிறப்புக் காவல்படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படை ஆகியவற்றை சாலைகளில் நிறுத்தவேண்டும். தேவைப்பட்டால், தமிழகத்திற்கு வரும்படி மத்திய துணை ராணுவப் படையினருக்கும் அழைப்பு விடுக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
"தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஓரளவு குறைந்தாலும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊர் சுற்றுவோரைக் கட்டுப் படுத்த அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மக்களைக் காக்கவேண்டிய பெரும் கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு சில கடுமையான நடவடிக்கைகளைத் துணிந்து எடுத்துதான் ஆகவேண்டும்," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

