'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ் 549 மனுக்களுக்கு தீர்வு

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ் 549 மனுக்களுக்கு தீர்வு

1 mins read
be985205-82d2-47d3-8eda-e9476f94268c
'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம் நடப்புக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக 549 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தையல் இயந்திரம், வாரிசுச் சான்றிதழ், காதொலிக் கருவி, இலவச வீட்டுமனைப் பட்டா போன்றவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழக முதல்­வ­ராக இம்­மா­தம் 7ஆம் தேதி பத­வி­யேற்ற தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லின், 'உங்­கள் தொகு­தி­யில் முதல்­வர்' என்ற திட்­டத்­தைத் தொடக்கி வைத்து இதற்­கென ஓர் ஐஏஎஸ் அதி­காரியை­யும் நிய­ம­னம் செய்­தார். கடந்த 9ஆம் தேதி 4 லட்சம் மனுக்கள் சிறப்பு அதிகாரியிடம் ஒப்ப டைக்கப்பட்ட நிலையில், இதில் 70,000 மனுக்­கள் பதிவு செய்­யப்­பட்­டு, தற்­போது 549 மனுக்­க­ளுக்குத் தீர்வு காணப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மனுதாரர்களில் சிலருக்கு முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை உள்ளிட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

இம்மனுக்­கள் அனைத்தும் மாவட்ட வாரி­யாகப் பிரிக்­கப்­பட்டு ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் குறுந்­ த­க­வல் அனுப்­பப்­பட்டு வரு­வ­தா­க­வும் விரை­வில் இந்த மனுக்­கள் அனைத்­துக்­கும் தீர்வு காணப்­படும் என்­றும் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.