அன்றாட தொற்று பாதிப்பு: முதலிடம் பிடித்தது தமிழகம்

அன்றாட தொற்று பாதிப்பு: முதலிடம் பிடித்தது தமிழகம்

2 mins read
07dd3090-e230-4e6b-9f2f-7d4f2c30364f
-

ஒரே நாளில் 34,875 பேரை கிருமி தொற்றியது; 365 பேர் பலியாகினர்

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோ­னா­வால் புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரிக்­கத் துவங்­கி­யி­ருப்­பது நிபு­ணர்­கள் மத்­தி­யில் கவ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

நேற்று முன்­தி­னம் ஒரே ­நா­ளில் மாநி­லம் முழு­வ­தும் 34,875 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. மேலும் அன்­றைய தினம் 365 பேர் கிரு­மித் தொற்­றுக்­குப் பலி­யாகி விட்­ட­னர்.

இதன்­மூ­லம் இந்­தி­யா­வில் ஒரே­நாளில் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­படும் பட்­டி­ய­லில் தமிழ்­நாடு முத­லி­டத்­தில் உள்­ளது. நேற்று முன்­தி­னம் மகா­ராஷ்­டி­ரா­வில் 34,031 பேரும் கர்­நா­ட­கா­வில் 34,281 பேரும் கேர­ளா­வில் 32,762 பேரும் கிரு­மித் தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தின் 37 மாவட்­டங்­க­ளி­லும் குறைந்­த­பட்­சம் இரு­நூ­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. சென்­னை­யில் ஒரே நாளில் 6,267 பேரை கிருமி தொற்­றி­யுள்­ளது. சென்­னை­யில் மட்­டும் நேற்று முன்­தி­னம் 91 பேர் உயி­ரி­ழந்துவிட்­ட­னர். அடுத்த இடத்­தில் உள்ள கோவை­யில் 3,250 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது. அதி­கம் பாதித்த மாவட்­டங்­க­ளின் பட்­டி­ய­லில் செங்­கல்­பட்டு (2,275), திரு­வள்­ளூர் (1,778), திருப்­பூர் (1,573), திருச்சி (1,459), ஈரோடு (1,362), மதுரை (1,156)ஆகிய மாவட்­டங்­கள் அடுத்­த­டுத்து இடம்­பெற்­றுள்­ளன.

தமி­ழ­கத்­தில் 15 மாவட்­டங்­களில் நேற்று முன்­தி­னம் ஐநூ­றுக்­கும் மேற்­பட்­டோர் புதி­தாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

இதே­வே­ளை­யில் கள்­ளக்­குறிச்சி, பெரம்­பலூர், சிவ­கங்கை ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளைத் தவிர மற்ற அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் ஓர் இறப்­புச் சம்­ப­வ­மே­னும் பதி­வாகி உள்­ளது.

செங்­கல்­பட்­டில் 46 பேரும், கன்­னி­யா­கு­ம­ரி­யில் 23 பேரும் உயி­ரி­ழந்து விட்­ட­னர். கோவை­யில் 17, மது­ரை­யில் 14, திருச்­சி­யில் 13 என இறப்­புச் சம்­ப­வங்­கள் பதி­வாகி உள்­ளன. தமி­ழ­கத்­தில் தற்­போது 253,000 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இது­வரை கொரோனா தொற்­றால் 18,734 பேர் பலி­யாகிவிட்­ட­னர்.

இதற்­கி­டையே மதுரை மாவட்­டத்­தில் கொரோனா நோயா­ளி­க­ளைத் தக­னம் செய்ய மூன்று புதிய மின்­த­கன மேடை­கள் அமைக்­கப்­பட உள்­ளன.

மது­ரை­யில் உள்ள அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் உள்­ளூர் மக்­கள் மட்­டு­மல்­லா­மல் சிவ­கங்கை, விரு­து­ந­கர், இரா­ம­நா­த­பு­ரம் உள்­ளிட்ட தென்­மா­வட்­டங்­களில் இருந்து ஏரா­ள­மா­னோர் கொரோனா சிகிச்­சைக்­காக வரு­கின்­ற­னர்.

சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழப்­போ­ரின் உடல்­களை குடும்­பத்­தா­ரும் உற­வி­னர்­களும் மது­ரை­யில் உள்ள சுடு­காட்­டி­லேயே தக­னம் செய்­கின்­ற­னர்.

மதுரையில் 11 இடங்களில் மயானங்கள் உள்ளபோதிலும் மூன்று இடங்களில் மட்டுமே நவீன அம்சங்களுடன் கூடிய மின்தகன மேடைகள் உள்ளன.

மின்தகன மேடையில் ஒரு பிணத்தை எரிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாகும். அதனால், தினமும் 50 சடலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதலாக மூன்று மின்தகன மேடைகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.