பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்க சிறப்பு பணிக்குழு

பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்க சிறப்பு பணிக்குழு

1 mins read
0e772c27-2163-42b3-a12f-86fb6b429137
-

சென்னை: கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் குழந்­தை­க­ளைப் பரா­ம­ரிக்க மாவட்ட ஆட்­சி­யர் தலை­மை­யில் ஏழு பேர் கொண்ட பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக வெளியிடப்­பட்ட செய்­திக்­கு­றிப்பில், கொரோனா­ கிருமி குழந்­தை­களைப் பாதிக்­கிறது என்ற தக­வல் மிகுந்த கவலை அளிப்­ப­தாக அரசு குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும், தமி­ழக அரசு குழந்­தை­க­ளின் பரா­ம­ரிப்பு, பாது­காப்­பில் அதிக அக்­கறை கொண்­டுள்­ள­தா­க­வும் ஏற்­கெ­னவே கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு கிடைக்­கும் உத­வி­கள் குறித்து பொது­மக்­க­ளி­டையே தேவை­யான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­க­வும் அந்த அறிக்கை தெரி­விக்­கிறது.

கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் குழந்­தை­களை பரா­ம­ரிப்­ப­தற்­கும் அவர்­க­ளுக்குத் தேவை­யான சேவை­களை வழங்­கு­வ­தற்­கும் ஏது­வாக அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர் தலை­மை­யின் கீழ் 7 உறுப்­பி­னர்­களைக் கொண்ட மாவட்ட அள­வி­லான பணிக்­குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­தப் பணிக்­குழு பெற்­றோரை இழந்த அல்­லது கவ­னிப்பு, பாது­காப்பு தேவைப்­படும் குழந்­தை­களைக் கண்­ட­றிந்து அவர்­களை குழந்­தை­கள் நலக் குழு­வின் முன் முன்­னி­லைப்­ப­டுத்­தும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குழந்­தை­கள் நல குழு­வா­னது பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு மறு­வாழ்வு வழங்­கு­தல் அல்­லது குழந்­தை­கள் இல்­லங்­களில் சேர்த்­தல் குறித்து முடிவு செய்­யும் என­வும் அரசு கூறி­யுள்­ளது.

குழந்­தை­க­ளுக்கு உள­வி­யல் சார்ந்த ஆலோ­சனை வழங்­கப்­படும் என்­றும் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­களை சிகிச்சை மையங்­க­ளுக்கு சரி­யான நேரத்­தில் பரிந்­து­ரைத்­தல், ஊட்­டச்­சத்து வழங்­கு­வதை உறுதி செய்­தல் ஆகிய நட­வ­டிக்­கை­க­ளை­யும் மாவட்ட பணிக்­குழு மேற்­கொள்­ளும் என்­றும் செய்­திக்­கு­றிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.