கறுப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் ஒருவர் பலி

கறுப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் ஒருவர் பலி

2 mins read
ccc79fe6-60f3-4cba-82b2-fbf597e9c5ff
-

சென்னை: வட இந்­திய மாநி­லங்­களை அச்­சு­றுத்தி வரும் கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு தமி­ழ­கத்­தி­லும் பர­வத் தொடங்­கி­யுள்­ளது.

கோவில்­பட்டி அருகே இந்­நோய் தாக்­கு­த­லுக்கு ஆளான பட்­டறை உரி­மை­யா­ளர் உயி­ரி­ழந்­துள்­ளார்.

கொரோனா கிரு­மி­யின் பிடி­யில் இருந்து மீண்ட பிற­கும் சில­ருக்கு கறுப்பு பூஞ்சை நோய் ஏற்­ப­டு­கிறது. இத­னால் சிலர் உயி­ரி­ழக்­க­வும் நேரிடு­கிறது.

அண்­மைய சில தினங்­க­ளாக கர்­நா­டகா, மஹா­ராஷ்­டிரா, தெலுங்­கானா, ஹரி­யானா, ராஜஸ்­தான், மத்­திய பிர­தே­சம், உத்­த­ரகாண்ட், பீகார் உள்­ளிட்ட மாநி­லங்­களில் பலரை கறுப்பு பூஞ்சை நோய் தாக்­கி உள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் இரண்­டா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­நோய் தொடர்­பான மரண எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது. இந்­நிலையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு தமி­ழ­கத்­தில் ஒரு­வர் பலி­யாகி உள்­ளார்.

தூத்­துக்­குடி மாவட்­டம் கோவில்­பட்டி அருகே உள்ள நர­சிம்­ம­பு­ரம் கிரா­மத்­தைச் சேர்ந்த 57 வயது பட்­டறை உரி­மை­யா­ள­ருக்கு அண்­மை­யில் கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்­பட்­டது.

ஏற்­கெ­னவே கொரோனா தொற்­றுக்­கா­க­வும் அவர் சிகிச்சை பெற்று வந்­தார்.

இந்­நி­லை­யில் சிகிச்சை பல­னின்றி நேற்று அவர் உயி­ரி­ழந்­தார்.

இதற்­கி­டையே, சென்­னை­யில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட ஐந்து நீரி­ழிவு நோயா­ளி­கள் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்டுள்­ள­தாக தினத்­தந்தி வெளி­யிட்ட செய்தி தெரி­விக்­கிறது.

மது­ரை­யில் 50 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு இருப்­ப­தா­க­வும் அவர்­கள் அனை­வ­ருக்­கும் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், கறுப்பு பூஞ்சை நோயை எதிர்­கொள்ள தமி­ழக அரசு தயார் நிலை­யில் இருப்­ப­தாக அற­நிலை­யத்­துறை அமைச்­சர் சேகர்­பாபு தெரி­வித்­துள்­ளார். சிகிச்­சைக்குத் தேவை­யான மருந்­து­கள் கையிருப்­பில் உள்­ள­தா­க­வும் அவர் கூறி­உள்­ளார்.