மு.க.ஸ்டாலின்: கிருமித் தொற்றை வெல்ல ஊரடங்கு போதாது

மு.க.ஸ்டாலின்: கிருமித் தொற்றை வெல்ல ஊரடங்கு போதாது

1 mins read
47311e68-f204-4a96-a7ef-0ae6424c929e
-

சென்னை: கொரோனா பெருந்­தொற்­றின் இரண்­டா­வது அலை­யா­னது மக்­க­ளின் உடல் நல­னை­யும் வாழ்­வா­தா­ரத்­தை­யும் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தை­யும் பெரும் பாதிப்­புக்­குள்­ளாக்கி உள்­ளது என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தொழில்­துறை நிறு­வ­னங்­க­ளு­டன் அவர் நேற்று காணொளி மூலம் கலந்­தா­லோ­சனை மேற்­கொண்­டார்.

அப்­போது பேசிய அவர், கொரோனா தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஊர­டங்கு என்­பது ஒரு தீர்­வல்ல என்­றார்.

ஊர­டங்கு என்­பது பல­ரது வாழ்­வை­யும் தொழி­லை­யும் பாதித்­து­வி­டும் என்று குறிப்­பிட்ட அவர், தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த திமுக அரசு பொறுப்­பேற்­ற­வு­டன் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து போர்க்­கால அடிப்­படை­யில் மக்­களைக் காக்­கும் பணி­யில் ஈடு­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

அரசு அலு­வ­லர்­கள், முன்­களப் பணி­யா­ளர்­கள் என அனை­வ­ரும் இரவு பகல் பாராது இப்­ப­ணி­யில் முழு முனைப்­பு­டன் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் அப்­ப­டிப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் ஒன்­று­தான் ஊர­டங்கு என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­தார்்.

"தொழில் நிறு­வ­னங்­கள் எவ்­வித சிர­ம­மின்றி இயங்க ஏது­வாக அவற்­றின் தொழி­லா­ளர்­கள், பணி­யா­ளர்­கள் ஆகி­யோர் பணிக்குச் சென்­று­வர 'இ-பதிவு' முறையை நடை­மு­றைப்­ப­டுத்தி இருக்­கி­றோம்.

"உங்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய சிர­மங்­களைக் களை­வ­தற்­காக 24 மணி நேர­மும் செயல்­ப­டக்­கூ­டிய உதவி மைய சேவையும் தொழில் வழி­காட்டி மையத்­தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது," என்­றார் மு.க.ஸ்டா­லின்.

மேலும், 'சிப்­காட்' நிறு­வ­னம் இது­வரை 500 உயிர்­வாயுத் தோம்­பு­களை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து விமா­னம் மூல­மா­கக் கொண்டு வந்­தி­ருப்­ப­தா­க­வும் மேலும் 1,650 தோம்­பு­கள் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து கப்­பல் வழி­யா­கக் கொண்டு வரப்­ப­டு­வ­தா­க­வும் முதல்­வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரி­வித்­தார்.