சென்னை: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி அதிபருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி எழுவரின் விடுதலை தொடர்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டின் அதி
பருக்கு எழுதிய கடிதத்தில் உடன்பாடு இல்லை எனக் கூறியுள்ளார்.
மொழி, சமயம், சாதி, இனம் ஆகியவற்றின் பெயரால் பாகுபாடு பார்த்து, தமிழர்கள் என்ற முறையில் இந்த 7 பேருக்கு மட்டும் விடுதலை கோருவதில் உடன்பாடு இல்லை என்று குறிப்பிட்ட அவர், "தமிழகத்தில் 100க்கு மேற்பட்டோர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தண்டனை அனு
பவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் விடுதலை கோரினால் அது மனிதாபிமானம். ஆனால், இந்த 7 பேருக்கு மட்டும் விடுதலை கோருவதில் நியாயமில்லை," என்று கூறியுள்ளார். ஒருவருக்கு தண்டனை அளிப்பது குறித்து நீதிமன்றம்தான் முடி
வெடுக்க வேண்டும், அரசியல் அழுத்தங்கள் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த எழுவரையும் விடுதலை செய்ய தமிழக
அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தி உள்ளார்.இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161ன்கீழ் மாநில அரசு மீண்டும் முடிவெடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

