சென்னை: கொரோனா கிருமித்தொற்றின் முதல் அலை காலகட்டத்தைவிட இரண்டாவது அலை சமயத்தில் பிறக்கும் குழந்தைகளில் பலருக்கு கிருமித்தொற்று அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் 12 வயது வரையிலான கிட்டத்தட்ட 1,300 குழந்தைகளுக்கு தொற்றுப் பரிசோதனை செய்ததில், நோய்த் தொற்றுள்ள தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் கடுமையான தொற்று பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பது ஆறுதல் அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு 20% வரை அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கர்ப்பிணிகள் உடனடியாக அது குறித்து மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அதன் மூலம், அவர்
களுக்குப் பிறக்கும் குழந்தை
களுக்குத் தொற்று ஏற்படும் அபாயம் பற்றி முன்கூட்டியே அறிய முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று முதல் அலை காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டது.
ஆனால், கடந்த சில நாட்களில் பிறந்த பல குழந்தைகள் தொற்று கரரணமாக மருத்துவ
மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுடன் நிமோனியா தாக்கிய குழந்தைக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல், சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள் இருந்தால், உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

