கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆயினும், அத்தியாவசியத் தேவைகளை மக்கள் நிறைவேற்றிக் கொள்வதற்காக மளிகை, காய்கறிக் கடைகளை காலை 6 முதல் 10 மணி வரை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்குப் பிறகும் மக்கள் வெளியில் நடமாடுவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகி்ன்றனர். இ-பதிவு இல்லாமல் வாகனங்களில் செல்வோர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். ஆரணியில் கட்டுப்
பாடுகளை மீறி திறந்திருந்த 15 கடைகள், நிறுவனங்களை மூடி வருவாய்த் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

