சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று தொடர்ந்து அதி
கரித்து வருவதால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது.
தற்போது நடப்பில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 24ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடனும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்
களைக் கொண்ட குழுவுடனும் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மருத்துவ நிபுணர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டது.
ஊரடங்கை நீட்டிக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழுவும் ஆதரவு தெரிவித்தது.
இதனையடுத்து, நாளை முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மக்கள் அவசரப்
படாமல் அத்தியாவசியப் பொருள்களை வாங்க ஏதுவாக நேற்றும் இன்றும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனு
மதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஊரடங்கு காலத்தில் பால், குடிநீர், நாளேடுகள் போன்றவற்றை விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் போன்றவை முழு ஊரடங்கு காலத்திலும் செயல்படும்.
உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூர் செல்லும் பயணி
களின் நலன் கருதி இன்று வரை இரு நாள்களுக்கு அரசு, தனியார் பேருந்துகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல் இயங்கலாம்.
உரிய மருத்துவ காரணங்கள், இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு டன் அனுமதி வழங்கப்படும்.
உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி இல்லை. கடைகளிலிருந்து வாங்கிச் செல்ல அனுமதி உண்டு.
தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியா
வசியத் துறைகள் மட்டும் இயங்கும். தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி பணிபுரிய அனுமதி உண்டு.
தமிழகத்தில் நேற்று முன்
தினம் ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று பதிவானது, மேலும் 467 பேர் உயிரிழந்தனர். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

