கிராமங்களில் அதிகரிக்கும் தொற்று

கிராமங்களில் அதிகரிக்கும் தொற்று

1 mins read
27d3f1a4-ee48-4fea-83eb-be9c484211fb
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று இரண்­டா­வது அலை கால­கட்­டத்­தில் கிரா­மப்­

பு­றங்­க­ளி­லும் ஏரா­ள­மா­னோர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி இருப்­ப­

தா­கத் தக­வல்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

கொரோனா தொற்று முதல் அலை காலத்­தில் கிரா­மப்­பு­றங்­களில் குறைந்த அள­வி­லான பாதிப்­பு­கள் பதி­வான சூழ­லில், இம்­முறை கிரா­மங்­களில் கொரோனா பாதிப்பு விகிதம் 30 விழுக்­கா­டாக அதி

­க­ரித்­துள்­ளது. நக­ரங்­களில் இருப்­பது போன்று பெரிய மருத்­து­வ­

ம­னை­கள், சிகிச்சை வச­தி­கள் இன்றி கிரா­மப்­புற மக்­கள் தவிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

திருப்­பூர் மாவட்ட கிரா­மப்­பு­றங்­களில் அத்­தி­யா­வ­சிய பொருட்­கள் கிடைக்­காத நிலை­யில், நக­ரப் பகு­தி­க­ளுக்கு மக்­கள் வந்து செல்­

வ­தால் தொற்று பர­வு­வ­தா­க­வும் பொது­மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் உள்ள கிரா­மங்­க­ளி­லும் தொற்று பரவி வரு­வ­தை­ய­டுத்து, ஏரா­ள­

மா­னோர் காய்ச்­சல், சளி, உடல்­

வ­லி­யால் அவ­தி­யு­று­வ­தா­க­வும் உட­ன­டி­யாக கிரா­மங்­களில் சுகா­தார முகாம் அமைத்து சோதனை செய்­ய­வேண்­டும் என­வும் கோரிக்கை எழுந்­துள்­ளது.

திருமணம் போன்ற நிகழ்வுகளில் கூட்­டம் கூடு­வ­தா­லும் முகக்­

க­வ­சத்தை பலர் தவிர்ப்­ப­துமே கிரா­மப் புறங்களில் கொரோனா பர­வ­லுக்கு கார­ண­மாக உள்­ளன என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.